பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

159


வீட்டைப் பிடுங்கி விறகாய் எரித்தாலும்; வீணாதி வீணனுக்கு என்ன செய்வேன்?

வீட்டையும் கொள்ளை கொடுத்துப் பங்குக்கும் நிற்கிறது.

வீட்டையும் மெழுகி வைத்து வெறும் குழம்பையும் ஆக்கி வைத்துக் கல்லடிச் சோற்றுக்குக் காத்திருப்பார் சீரங்கத்தார். 20560


வீடு அசையாமல் தின்னும்; ஆனை அசைந்து தின்னும்.

வீடு அவரைப் பந்தல் போல் இருக்கிறது.

வீடு எரியக் கிணறு எடுக்க.

வீடு எல்லாம் குருடு; வாசல் எல்லாம் கிணறு.

(முற்றத்தில் எல்லாம் கிணறு.)

வீடு கட்டுகிறது அரிது; வீடு அழிக்கிறது எளிது. 20565


வீடு கட்டும் முன்னம் கிணறு வெட்ட வேண்டும்.

வீடு தருவோன் மேலும் தருவான்.

வீடு தோறும் வாசற்படி உன்டு.

வீடு நிறைந்த விளக்குமாறு.

வீடு பலக்கக் கட்டினால் புயலுக்கு ஈடு கொடுக்கும். 20570


வீடு பற்றிக்கொண்டு எரியும்போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம்.

வீடு பற்றி வேகும்போது கிணறு எடுப்பதா?

வீடு பற்றினதற்குக் கிணறு வெட்ட நாள் பார்த்த கதை.

வீடு போ போ என்கிறது; காடு வா வா என்கிறது.

வீடும் விளக்குமாய் இருந்தால் நாடும் நடப்பும் வேண்டாம்? 20575


வீடுவரை மனைவி; காடுவரை பிள்ளை.

வீடு விட்டு வெளிப்பட்ட நாய் விடுதி நாய்.

வீடு விழுந்தது விறகுக்கு ஆச்சு.

வீடு விளக்கும் விளக்குமாறு.

வீடு வீடாய் அலைகிறான். 20580


வீடு வீடாய் ஏறி இறங்குகிறான்.

வீடு வீடாய்ப் பதம் பார்க்கிறான்.

வீடு வெறும் வீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்.

வீடு வெறும் வீடு; மேல் வீடு அதிகாரம்.

வீடு வெறும் வீடு: வேலூர் அதிகாரம். 20585