பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தமிழ்ப் பழமொழிகள்


வெந்ததைப் போடு, முன்றானையிலே.

வெந்த புண்ணில் வேல் நுழைந்தது போல.

(சொருகினது போல.)

வெந்த புண் வினை செய்யாது.

வெந்த முகத்தைக் காட்டாதே; வந்த விருந்தை ஓட்டாதே.

வெந்த மூஞ்சியை விளக்கில் காட்டினாளாம்; வந்த விருந்தெல்லாம் ஓடிப் போச்சாம். 20725


வெந்தயம் இட்டி கறிக்குச் சந்தேகம் இல்லை.

வெந்தயம் போடாத கறியும் கறி அல்ல; சந்தடி இல்லாத ஊரும் ஊர் அல்ல,

(சந்தை இல்லாத. ஆசாரி இல்லாத.)

வெந்தழல் மெழுகு போல.

வெந்தால் தெரியும் வெங்காய மணம்.

வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும். 20780


வெந்நீர் இறைத்தால் வீடு வேகுமா?

வெந்நீர் என்றால் வாய் வெந்து விடுமா?

வெந்நீரில் குளிக்க அஞ்சுபவரா தீயிற்பாயப் புகுவார்?

வெந்நீரில் விழுந்த கோழி தானே எழுந்து போமா?

வெந்நீரில் விடு வேகுமா? 20735


வெம்பா பெய்தால் சம்பா விளையும்.

வெய்யில் விதைப்பும் சரி; வைப்பாட்டி பிள்ளையும் சரி.

வெய்யிலில் அகப்பட்ட புழுவைப் போல.

வெய்யிலில் நடந்தால் நிழலின் அருமை தெரியும்.

வெய்யிலில் போட்டாலும் காய மாட்டான்; தண்ணீரில் போட்டாலும் நனைய மாட்டான். 20740

(உலர மாட்டான்.)


வெய்யிலில் விடுகிறதும் இல்லை; மழையில் விடுகிறதும் இல்லை.

வெய்யிலின் முன்னே மின் மினி பிரகாசிக்குமா?

வெய்யோன் வெயில் முன் எரி தீபம் போல்.

வெல்லத்தால் பிள்ளையார் வைத்தால் நை வேத்தியத்துக்குக் கிள்ளி வைக்கலாமா?

வெல்லத்தைக் காட்டிப் பிள்ளையை அழைக்கிறதா? 20745


வெல்லப் படை இல்லை; தின்னப் படை உண்டு.

வெல்லப் பானையை எறும்பு மொய்த்தது போல.