பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

169


வெள்ளிக்கிழமை கொள்ளிக்கு ஆகாது.

வெள்ளிக்குப் பல் முளைத்தால் போல.

வெள்ளிக்குப் போட்டதும் கொள்ளிக்குப் போட்டதும் சரி. 20800


வெள்ளி ஞாயிறு மேற்கே சூலம்.

வெள்ளிடை மலைபோல.

வெள்ளி போட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையா?

வெள்ளி மலையும் வேகவதி ஆறும்.

(வெள்ளிமலை-ஹவ்திகிரியாகிய காஞ்சி.)

வெள்ளி மோதிரம் ஓசை தரும்; பொன் மோதிரம் ஓசை தராது. 20805

(ஓசை பெறும்.)


வெள்ளியில் விதை முடி; சனியில் கதிர் முடி.

வெள்ளி வட்டிலும் வேண்டும்; விளிம்பிலே பொன்னும் வேண்டும்.

வெள்ளி வீசினால் வீசம் குறையும்.

வெள்ளுரான் புறமடை அடைத்தது போல.

வெள்ளெருக்குக்கும் வெள்ளாட்டுப் பாலுக்கும் கள்ளக் கருமேகம் காணாமற் போம். 20810


வெள்வெலும்பை நாய் கடித்தது போல.

வெள்ளை இட்டால் வினை போகும்.

வெள்ளை உடுத்து வீசி நடந்தாலும் வெள்ளாட்டி வெள்ளாட்டியே

வெள்ளை எல்லாம் பால்; வெளுத்தது எல்லாம் மோர்.

வெள்ளைக்காரன் காலத்திலே தலைத் தலைக்குப் பண்ணாட்டு. 20815


வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத் தோல் இடம் கொடுத்தார்கள்.

அது அறுத்து ஊர் முழுதும் அடித்து இது எனது என்றான்.

வெள்ளைக்கு அழுக்கும் வேண்டாத பேருக்கு வார்த்தையும் எப்படியும் வரும்.

(வெள்ளைத் துணிக்கு அழுக்கும்.)

வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.

(வெள்ளைக்குக் கள்ளம் இல்லை.)

வெள்ளை கொடுக்க வினை தீரும். 20820


வெள்ளை கொடுத்தால் வினை தீரும்; பச்சை கொடுத்தால் பாவம் தீரும்.

வெள்ளைப் பாவாடை விரித்தாற் போல.