தமிழ்ப் பழமொழிகள்
171
வெற்றிலை தந்த விஜய லக்ஷ்மி.
வெற்றிலைப் பொதிக்காரனும் அழுகிறான்; உப்புப் பொதிக்காரனும் அழுகிறான்.
வெற்றிலை போடுவாள் பெண் பிள்ளை; அவளை வெற்றிலைக் கொடிக்காலுக்கு விடமாட்டான் ஆண்பிள்ளை.
வெற்றிலை போல் இருக்கும். மிகுந்த மரம் ஆகிவிடும்; புத்தி உள்ள பூமரத்துக்குப் பூ இரண்டு வக்கணையாம். 20850
வெற்றிலை விலையைக் குத்திரத்திலே எழுதாதே.
வெற்றிக்காரன் குடியை விடான் வீண் புத்திக்காரன் பாவத்துக்கு அஞ்சான்.
வெறிக்கு இட்டு அழியேல்.
வெறி கொண்ட ஆனை மதர்த்துத் திரிகிறது போல.
வெறி கொண்ட மனசுக்குக் குழி தோண்டும் குணம் தோன்றும். 20855
வெறி நாய் அழகு சொறிநாய்க்கு வருமா?
வெறி நாய்க்கு வெல்லக் கட்டி.
வெறி நாய் கடித்தால் உடனே மரணம்.
வெறி நாய் போல.
வெறி நாய் வேட்டி கட்டித் திருநாள் பார்க்கப் போகிறது. 20860
வெறிப் பிள்ளை கிழித்தது கோவணத்துக்கு ஆகும்.
வெறி பிடித்த நாய்க்கு வெந்நீர் ஸ்நானமாம்.
வெறி பிடித்த நாய்மாதிரி கண்ணும் மன்னும் தெரியவில்லை.
வெறி பிடித்த நாய் வேங்கைக்குச் சமம். வெறி பிடித்த நாய் வேடிக்கை ஆகாது. 20865
வெறியன் கிழித்தது கோவணத்துக்கு ஆயிற்று.
வெறுகு இட்டு அழியேல்.
வெறும் கஞ்சியைக் குடித்துவிட்டு மசையிலே நெய்யைத் தடவிக் கொள்கிறது.
வெறும் கழுத்துக்கு அரைப்பணத்துத் தாலி சிலாக்கியம்.
வெறும் கழுதைக்கு வீறாப்பு அதிகம். 20870
வெறும் காதுக்கு ஓலைக்காது மேல்.
வெறும் குண்டி அம்மணம்; போட்டுக்கொள் சம்மணம்.