பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

175


வேட்டை நாய் போல் விழுகிறான்.

வேட்டை நாய் வழக்கு அறியுமா?

வேட்டை நாயை ஏவி விட்டது போல.

வேட்டை நாயைக் கண்ட சொறி நாய் வாலை மடக்கினது போல.

வேட்டை பெரிது என்று பேய் நாயைக் கட்டி இழுக்கிறதா? 20940


வேட்டையில் பிரியமான வேட்டை சிக்காரி வேட்டை.

வேடக்காரா, வேடம் விட்டா: ஓடக்காரா, ஓடம் விடடா.

வேடத்தில் நாலு விதம் உண்டு.

வேடத்தினால் என்ன. வெண்ணீற்றினால் என்ன?

வேடம் அழிந்து போம். 20945


வேடம் கூடம் கொள்ளாது.

வேடம் மூன்று வகை.

வேடமோ தவ வேடம்; மனத்திலோ அவ வேடம்.

வேடர் இல்லா ஊரில் யாவும் குடி இருக்கும்.

வேடர்களில் மலை வேடர் விசேஷம். 20950


வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டு போல.

வேடருக்கு அருமையான வேட்டை முயல் வேட்டை.

வேடன் பிள்ளைக்கு இறைச்சி அரிதா?

வேடன் வலையில் அகப்பட்ட மான்போல்.

வேடனுக்குத் தேன் பஞ்சமா? மூடனுக்கு அடி பஞ்சமா? 20955


வேடிக்கைக்குப் பிள்ளை பெற்றேன்; வேண்டும் என்றால் பேர் இடு.

வேடிக்கைக்கு விலை இல்லை; கதைக்குக் கால் இல்லை.

வேடிக்கைக்கு விலை உண்டா?

வேண்ட வேண்டத் தாண்டவம் ஆடுகிறான்.

வேண்டாத நாளிலே வேப்பங்காய் ஆனேன். 20960


வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்.

வேண்டாத பேருக்கு ஈந்து என்ன? வேலையில் ஆற்றுத்தண்ணீர் விழுந்து என்ன?

வேண்டாதவனுக்கு வலப் பக்கத்தில் ஊறுகாய்.

வேண்டாதவனுக்கு வெறும் வெற்றிலை.

(வேண்டாதவன் கையில்.)

வேண்டாதாரை நினைத்தாய் வேப்பங்காய். 20965