176
தமிழ்ப் பழமொழிகள்
வேண்டா வெறுப்பாய் ஏண்டி கொடுப்பாய்?
வேண்டா வெறுப்பும் திருவாதிரையும்.
வேண்டியவன் காதலைப்பார்: வேண்டாதவன் தூதைப்பார்.
வேண்டி வினை செயேல்.
வேண்டி வேண்டிக் கொடுத்தால் வேண்டாம் என்பதா? 20970
வேண்டி வேண்டிக் கொடுத்தாலும் வேண்டாம் என்றாற் போல.
வேண்டினால் வேலியிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் வேரிலும் காய்க்காது.
வேண்டும் அயிரை விட்டு வரால் வாங்குபவர்.
வேண்டும் ஆனால் அவரை வேரிலும் காய்க்கும்.
வேண்டும் என்றால் எதுதான் செய்யக்கூடாது? 20975
வேண்டும் என்றால் விடு; வேண்டாம் என்றால் காடு.
வேண்டும் என்றால் வெண்ணெய்போல நூற்கலாம்.
வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது.
வேண்டும் என்று நூற்றால் வெண்ணெய் போல் நூற்கலாம்.
வேணும் கட்டைக்கு வேணும்; வெண்கலக் கட்டைக்கு வேணும். 20980
வேதத்தில் நாலு விதம் உன்டு.
வேதத்துக்கு உலகம் பகை; உலகத்துக்கு ஞானம் பகை.
வேதத்துக்கும் விக்கிரக பக்திக்கும் பகை.
வேதத்தை அறியாத கிழவன் வீண்.
வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை. 20985
வேதம் ஏன், நியாயம் ஏன், வித்தாரக் கள்ளருக்கு?
வேதம் ஒத்த மித்திரன்.
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை.
வேதம் கெட்டிவரை வேதம் செட்டவர் என்பானேன்?
வேதம் பொய்த்தாலும் வியாழன் பொய்க்காது. 20990
வேதாரணியத்தில் பாம்பு கடிக்கிறதும் இல்லை; வேதாரணியத்தில் பாம்பு குறைகிறதும் இல்லை.