தமிழ்ப் பழமொழிகள்
177
வேதாரணியத்தில் விளக்கு அழகு,
வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொண்டிது.
வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல்.
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும். 20995
வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
வேந்தனும் பாம்பும் நெருப்பும் சரி.
வேப்பங்கனிக்குக் காகம் காத்திருக்கும்.
வேப்பங்காய்க் குழம்பும் வீழி இலைத் துவையலும் அகமுடையான் சமைத்தால் அமிர்தம் அமிர்தம் என்பானாம்.
வேப்பந் தோப்பும் நாய் மந்தையும் கான்பது அரிது. 21000
வேப்பம் பழம் சிவந்தாலும் விரும்புமா கிளி?
வேப்பிலைக் கட்டியும் விழுதலைக் குழம்பும் அகமுடையான் சமைத்தால் அமிர்தம்.
வேப்பூர்த் திருடனை நம்பினாலும் கருப்பூர்ப் பார்ப்பானை நம்பக் கூடாது.
வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல; மருந்து எண்ணெய்.
வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா? 21005
வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும்.
வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா?
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது.
வேம்புக்குப் பல் அழகு பெறும்; வேலுக்குப் பல் இறுகும்.
வேம்பு வரும்பு ஆச்சே; வெற்றிலையும் நஞ்சு ஆச்சே. 21010
வேம்பு செய்வதை வேறு எவரும் செய்யார்.
வேம்பு தின்பவனுக்கு வேம்பு ருசி; கரும்பு தின்பவனுக்குக் கரும்பு ருசி.
வேம்பும் சரி; பாம்பும் சரி.
வேம்பும் சரி; வேந்தனும் சரி.
வேம்பும் தித்திக்குது, வேளையோடே பொல்லாப்பு. 21015
வேம்பு வாடுகிற வெயில்.
வேம்பு வெட்டிக் கெட்டது; பூவரசு வெட்டாமல் கெட்டது.