பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தமிழ்ப் பழமொழிகள்


வேம்பைத் தின்றார்க்கு வேம்பே மரணம்.

வேம்பை விரும்பக் கரும்பு ஆகும்.

வேர் அற்ற மரம் போல் சாய்ந்தான். 21020


வேர் இல்லாக் கொற்றான் போலே.

வேர் ஓடி விரைத்தி முளைத்தாலும் தாய் வழி தப்பாது.

(விலத்தி. யாழ்ப்பாண வழக்கு.)

வேர்க்க விளையாடினால் வியாதி நீங்கும்.

வேர் நின்றால் மரம் நிற்கும்; வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான்.

வேர் மூலிகை, மரம் மூலிகை, காய் மூலிகை. 21025


வேரில் விட்டால் கிளையில் தளிர்க்கும்.

வேரைக் கல்லி வெந்நீரை ஊற்றுகிறது.

(விடலாமா?)

வேரைக் களைந்த மரம் பிழைக்குமா

வேல் உண்டு; வினை இல்லை: மயில் உண்டு, பயம் இல்லை,

வேல் தொளைத்த புண்ணிலே கொள்ளிக் கட்டையைச் சொருகினது போல். 21030


வேல் வைத்துப் பயிர் ஆக்குவோ இல்லை.

வேலங்காட்டிலே போய் விளாங்காய் தேடினாற் போல.

(இருளர்.)

வேலம் பட்டை மேகத்தை நீக்கும்; ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.

வேலமரத்துக்கு நிழல் இல்லை; வெள்ளாளனுக்கு உறவு இல்லை.

வேல மரத்து முள்ளும் ஆல மரத்துக் கிளியும் ஆனேன். 21035


வேலனுக்கு ஆனை சாட்சி.

வேலி ஒன்றுக்கு ஈரிணை மாடும் இரண்டு ஆளும் வேண்டும்.

வேலி ஒன்றுக்குப் பன்னிரண்டு சலம் விரைப்பாடு.

வேலிக்கு ஓணான் சாட்சி.

வேலிக்கு ஓணான் சாட்சி; வெந்ததுக்குச் சொக்கன் சாட்சி. 21040


வேலிக்கு ஓணான்சாட்சி, வேலனுக்கு ஆனை சாட்சி.

வேலிக்குப் போட்டி முள் காலுக்கு வினை ஆயிற்று.

வேலிக்கு முள் இடக் காலில்தைத்தது.

(முள் போட.)

வேலிசாடும் பசுவுக்கு என்றைக்கும் கோல் கொண்டுதான் மரணம்.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

வேலி நிழல் ஆமோ? வேற்றுப் பேர் தாய் ஆமோ? 21045