பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தமிழ்ப் பழமொழிகள்


வேலை ஏன், பிள்ளை ஏன், வேலை இல்லாருக்குச் சாப்பாடு ஏன்?

வேலைக் கன்னிக்குப் பிள்ளைமேல் சாக்கு.

(வேலைக் குழப்பிக்கு.)

வேலைக் கன்னிக்குப் பிள்ளைமேல் சாக்கு; வெட்கம் கெட்ட நாரிக்கு அகமுடையான்மேல் சாக்கு. 21075


வேலைக் கன்னிக்கு வேளைக்குக் காற்படி; வீண் கட்டைக்கு வேளைக்கு அரைப்படி.

வேலைக்காரன் வந்தால் கூழைக் காய்ச்சி ஊற்று.

வேலைக்காரி என்று வேண்டிய பேர் கேட்டார்கள்; குடித்தனக்காரி என்று கொடுக்க மாட்டோம் என்றார்கள்.

வேலைக்காரி என்று வேலூரில் கேட்டார்களாம்.

வேலைக்காரியாய் வந்தவன் வீட்டுக்காரி ஆனால் அது அவள் அதிர்ஷ்டம். 21080


வேலைக்கு அடுத்த கூலி, வேசிக்கு அடுத்த கூலி.

வேலைக்கு இளைத்தவளுக்குப் பிள்ளை மீது சாக்கு.

வேலைக்கு ஏற்ற கூலி.

வேலைக்குத் தக்க கூலி. விருப்பத்துக்குத் தக்க கூர்மை.

வேலைக்குத் தக்க கூலி, வேசிக்கு வேண்டியது காசு. 21085


வேலைக்குத் தகுந்த வேஷம்.

வேலைக் குழப்பிக்குப் பிள்ளை மேல் ஆசை. விளையாட்டுப் பெண்ணுக்கு மண்மேல் ஆசை.

வேலைக் குழப்பிக்குப் பிள்ளைமேல் வாக்கு.

வேலைக்கோ சம்பளம் ஆளுக்கோ சம்பளம்?

வேலை செய்தால் கூலி, வேஷம் போட்டால் காசு. 21090


வேலை செய்யாத பிள்ளையைக் கையில்லை; வேலை செய்கிற பிள்ளையைக் காலில் வை.

வேலை பார்த்துப் பெண்ணைக் கொள்.

வேலை முகத்தில் நெருப்பும். சோற்று முகத்தில் சிரிப்பும்.

வேலை முத்தோ, பிள்ளை முத்தோ?

வேலை மெனக்கெட்ட அம்பட்டன் பூனைக் குட்டியைச் சிரைத்தானாம். 21095


வேலையில் நல்ல அடி அடிக்கிறான்.

வேலையைப் பார்த்துக் கூலியைக் கொடு.