பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

181


வேலையைப் பார்த்துப் பெண்ணை எடு; சாலையைப் பார்த்து ஊருக்கு நட.

வேலையோ இன்னதென்று தெரியவில்லை; காரியம் இடுப்பு ஒடிகிறது; செலவுக்குப் பணம் இல்லை; செவலைக் காளையை விற்றுச் செலவுக்குப் பணம் அனுப்பு என்றானாம்.

வேழத்துக்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும். 21100


வேழத்தை ஒத்த வினை வந்தால் தீர்வது எப்படி?

(எப்போது?)

வேழம் முழங்கினாற்போல.

வேளாண்மை எல்லாம் வல்லாண்மையாலே,

வேளாளர் செய்யாத வேளாண்மை வேளாண்மை அல்ல.

வேளாளன் கல்யாணம் விடிந்தால் தீர்ந்தது. 21105


வேளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே.

வேளாளன் மரபே மரபு, கள்ளர் திருப்டே திருட்டு.

வேளாளன் வைத்துக் கெட்டான்; துலுக்கன் உடுத்துக் கெட்டான்.

வேளாளனைப் பாடிய வாயால் வேந்தனைப் பாடுவது இல்லை.

வேளை அறிந்து பேசு; நாளை அறிந்து பயணம் பண்ணு. 21110


வேளைக்காரன் படுத்துகிற பாட்டுக்கு மேளகாரன் என்ன செய்வாள்?

(செய்ததற்கு.)

வேளைக்கு அரைக்காசு ஆயிரம் பொன் ஆம்.

வேளைக்கு அரைப்படி வெங்காய ரசம் இருந்தால் சும்மா இருந்து சொகுசாகச் சாப்பிடுவாள்.

வேளைக்கு அரைப் பணம் ஆயிரம் பவுன்; வேளை தப்பினால் நாயுடை மயிர்.

வேளைக்கு உதவாத பிள்ளை தாழங்காய்க்குச் சரி. 21115


வேளைக்கு ஓர் உறவு; ஆளுக்கு ஒரு மரபு.

வேளைககுத் தக்க புத்தி.

வேளைககுத் தகுந்த வேஷம்.

வேளையும் நாழிகையும் வந்தால் வேண்டாம் என்றாலும் நிற்காது.

வேளையும் பொழுதும் வாய்க்க வேணும். 21120


வேளையும் விதியும் வந்தால் வேலியால் வரும் மாப்பிள்ளை.

(யாழ்ப்பாண வழக்கு)