பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183


வை


வை என்ற எழுத்தே சொல்லும் செயலும் ஆகும்.

வை என்ற எழுத்தே பெயரும் விளையும் ஆகும். 21130


வைக்கத்துப்பட்டி, அரிப்பாட்டுக்குட்டி, அம்பலப் புழைக் காக்காய்.

(பட்டி-நாய். குட்டி-குழந்தை, இவை மிகுதியான இடங்கள்.)

வைக்கத் தெரியாமல் வைக்கோல் போரில் வைத்தானாம்.

(தெரியாதவன்.)

வைக்கத் தெரியாமல் வைத்துவிட்டு வந்தவரை எல்லாம் கேட்கலாமா?

வைக்கவும் தெரியாது; வைத்துப் படைக்கவும் தெரியாது.

வைக்கிறவன் வைத்தால் நடுப்பந்தியில் இருந்தால் என்ன, கடைப் பந்தியில் இருந்தால் என்ன? 21135


வைக்கோல் எடுத்த காசுக்கு வழக்காடி நிற்கையில் பரவச்சேரி மணியம் வாங்கித்தரச் சொன்னாளாம்.

வைக்கோல் எடுத்த வழியாய் இருக்கிறது.

வைக்கோல் கட்டுக்காரனாவது ஒதுங்கவேணும்; வழியே போகிறவனாவது ஒதுங்கவேணும்.

வைக்கோல் கட்டுக்காரனை ஒப்புக்குக் கட்டி அழுதாற் போல்.

வைக்கோல் கால் கொண்டு மாய்ந்து மாய்ந்து அடித்தாளாம். 21140


வைக்கோல் கூரையிலும் விழல்கூரை வெகுநாள் இருக்கும்.

வைக்கோல் கூளமும் ஒரு வேளைக்கு உதவும்.

வைக்கோல் தின்கிற குதிரைக்கு வேகம் அதிகமா?

வைக்கோல் தின்கிற மாட்டுக்குப் பால் கொஞ்சம்; மதுரம் அதிகம்.

(இனிப்பு அதிகம்.)

வைக்கோல் தின்னும் குதிரை வீட்டுக் கூரையையும் பிடுங்கும். 21145


வைக்கோல் பஞ்சமா? வறட்டுப் பசு பஞ்சமா?

வைக்கோல் பட்டையில் கட்டின நாய்.