தமிழ்ப் பழமொழிகள்
185
வைகைக் கரைக்கு வசர்த்தையும் கங்கைக் கரைக்குக் கீர்த்தியும்.
வைசியர்களில் பூவைசியர் சிரேஷ்டம்.
வைசியரும் சூத்திரரும் இருந்தல்லவோ பிராமணரும் க்ஷத்திரியர்களும் வருவார்கள்? 21175
வைசூரில் வந்தவர்கள் அம்மா என்று கூப்பிட வேண்டும்.
வைத்த உடைமையைக் கேட்க வயிறு எரிகிறது.
வைத்த கண் வாங்காத அழகு.
வைத்த கால் எடுக்கிறதற்குள் மாற்றுக் கால் செல் அரித்துப் போகிறதே!
வைத்தது உண்டானால் கெட்டதும் உண்டாகும். 21180
வைத்தது எல்லாம் கொள்ளும் மகாராஜன் கப்பல்.
வைத்தது எல்லாம் மரம் ஆகுமா?
வைத்ததுக்குமேல் வழி இல்லை; பிச்சைக்குப் போகச் சுரைக்குடுக்கை இல்லை.
வைத்தது கண்டது சொல்லாதே.
வைத்தது வரிசை சிரைத்தது மொட்டை. 21185
வைத்த பணம் குறையக் கூடாது; மக்கள் தொப்பை வாடக் கூடாது.
வைத்த பாரம் சுமப்பான்.
வைத்த பிழைப்புக்கு வைப்பாட்டி இரண்டு பேர்.
வைத்த பிள்ளையைப் பாதுகாத்தால் பெற்ற பிள்ளைக்கு உதவும்.
வைத்த மரத்தில் இலை அறுக்காதே. 21190
வைத்த வரிசைககுப் பிச்சமமாவாசை.
வைத்தால் எடுக்க வேண்டும்; வழி அறிந்தவன் போக வேண்டும்.
வைததால் குடுமி, சிரைத்தால் மொட்டை.
வைத்தால் பிள்ளையார்; விட்டு எறிந்தால் சாணி.
வைத்திய சாஸ்திரம் சாஸ்திரங்களில் விசேஷம். 21195
வைத்தியத்தில் ரண வைத்தியமும் வயசில் யௌவனமும் நல்லவை