பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

185


வைகைக் கரைக்கு வசர்த்தையும் கங்கைக் கரைக்குக் கீர்த்தியும்.

வைசியர்களில் பூவைசியர் சிரேஷ்டம்.

(சிறந்தவர்.)

வைசியரும் சூத்திரரும் இருந்தல்லவோ பிராமணரும் க்ஷத்திரியர்களும் வருவார்கள்? 21175


வைசூரில் வந்தவர்கள் அம்மா என்று கூப்பிட வேண்டும்.

வைத்த உடைமையைக் கேட்க வயிறு எரிகிறது.

வைத்த கண் வாங்காத அழகு.

வைத்த கால் எடுக்கிறதற்குள் மாற்றுக் கால் செல் அரித்துப் போகிறதே!

வைத்தது உண்டானால் கெட்டதும் உண்டாகும். 21180


வைத்தது எல்லாம் கொள்ளும் மகாராஜன் கப்பல்.

வைத்தது எல்லாம் மரம் ஆகுமா?

வைத்ததுக்குமேல் வழி இல்லை; பிச்சைக்குப் போகச் சுரைக்குடுக்கை இல்லை.

(கரைக் குடுவை.)

வைத்தது கண்டது சொல்லாதே.

வைத்தது வரிசை சிரைத்தது மொட்டை. 21185

(வைத்தது சட்டம்.)


வைத்த பணம் குறையக் கூடாது; மக்கள் தொப்பை வாடக் கூடாது.

வைத்த பாரம் சுமப்பான்.

வைத்த பிழைப்புக்கு வைப்பாட்டி இரண்டு பேர்.

வைத்த பிள்ளையைப் பாதுகாத்தால் பெற்ற பிள்ளைக்கு உதவும்.

(வைத்த பிள்ளை-தென்னம் பிள்ளை.)

வைத்த மரத்தில் இலை அறுக்காதே. 21190


வைத்த வரிசைககுப் பிச்சமமாவாசை.

வைத்தால் எடுக்க வேண்டும்; வழி அறிந்தவன் போக வேண்டும்.

(அறியாதவன்.)

வைததால் குடுமி, சிரைத்தால் மொட்டை.

வைத்தால் பிள்ளையார்; விட்டு எறிந்தால் சாணி.

(வழித்து எறிந்தால், வழித்து எடுத்தால். )

வைத்திய சாஸ்திரம் சாஸ்திரங்களில் விசேஷம். 21195


வைத்தியத்தில் ரண வைத்தியமும் வயசில் யௌவனமும் நல்லவை

(வயசில் இளமையும் நன்மை தரும்.)