பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.வா.ஜ.

இவர் 11.4.1906-ம் ஆண்டு பிறந்தார். தந்தை வாசுதேவ ஐயர், தாயார் பார்வதி அம்மாள். இவர் பள்ளியில் படிக்கும்போதே ‘விவேக சிந்தாமணி’ பாடல்களை மனப்பாடம் செய்து, அதற்கு அர்த்தம் சொல்லுவார். அந்தப் பருவத்திலேயே இவர் மேலும் சில தமிழ்ப் புத்தகங்களை வாங்கி, மனப்பாடம் செய்து விட்டு, தானும் அதேபோல் பாடல்களை எழுதி விடுவாராம். இந்த ஆற்றலால் ரெயிலில் போய்வரும் போது கூட ரெயில் ஓட்டத்தின் குதியோசைக்கு ஏற்ப ஏதாவது பாடிக் கொண்டே இருப்பாராம். இவரது கன்னி முயற்சியில் உருவானது. ‘போற்றிப் பந்து’ என்னும் பதிகம். வடுவூர் துரைசாமி ஐயங்கார் நடத்தி வந்த ‘ஒற்றுமை’ பத்திரிகையில் அது வெளியானது. 1927-ல். இவர் மகாவித்துவான் உ.வே. சுவாமிநாத ஐயரிடம் மாணாக்கராகச் சேர்ந்தார். 1933-ல் இவர் ‘வித்துவான்’ பட்டம் 1949-ல், காஞ்சி மஹா சுவாமிகள் இவருக்கு ‘திருமுருகாற்றுப்படை அரசு’ என்ற பட்டத்தையும், 1951-ல் ‘வாகீச கலாநிதி’ என்ற பட்டத்தையும் கொடுத்து கௌரவித்தார்.1982-ம் ஆண்டு ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் நினைவுப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இலக்கியம் சமயம் ஆகிய இரு துறைகளிலும் உரையாற்றுவதில் வல்லவர், நூற்றுக் கணக்கான தமிழ் நூல்களை எழுதிய இவர் 4.11.1988-ம் ஆண்டு தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டார்.