தமிழ்ப் பழமொழிகள்
35
மகளே வல்லாண்மை.
மகம் அறிவு தந்தை அறிவு.
மகன் பிள்ளையை இடுக்கியும், மகன் பிள்ளையை நடத்தியும்.
மகன் செத்தாலும் சாகட்டும்; மருமகள் கொழுப்பு அடங்கினால் போதும்
மகன் செத்தாலும் சாகட்டும்; மருமகன் தாலி அறுக்க வேணும். 17685
மகாதேவசி ஆடிடித்துப் பேயும் ஆடுகிறது.
மகா பட்டாதார்ச் செல்லாம் மானமாம்; மாட்டுக்காரப் பிள்ளைக்குச் சரணமாம்.
மகா புருஷர் மகிமை பிறவிக் குருடனுக்குத் தெரியுமா?
மகா பெரியவர் மண்டையிலே புழுத்தவர்.
மகாமகம் ஆனால் பார்க்கக் கூடாது. 17690
மகாமகம் பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு விசை வரும்.
மகாராஜன் கல்யாணத்தில் நீராகாரம் நெய் பட்ட பாடு.
மகாராஜன் பெண்சாதி மர்மச்சாரி, யாருடன் சொன்னாலும் திறமைக்காரி.
மகாராஜன் மண்ணைத் தின்றால் மருந்துக்குத் தின்றாள் என்பார்கள்; பிச்சைக்காரன் மண்ணைத் தின்றால் வயிற்றுக்கு இல்லாமல் தின்றான் என்பார்கள். 17695
மகாராஜனோடு சொக்கட்டான் போடலாமோ
மகாராஜா சத்ரபதி, அன்னசத்திரம் இராப்பட்டினி.
மகாலஷிமி பரதேசம் போனாற்போல.
மகிமைக்கார மாப்பிள்ளை வந்திருக்கிறான் தேசப்பிலே.
மகிமைக்கு அஞ்சிய மருமகனே. எருமைக் கன்றைக் கொல்லாதே. 17700
மகிமை சுந்தரி, கதவை ஒஞ்சரி.
மகிகைப் பட்டவனுக்கு மரணம்; மாட்டுக்காரப் பையனுக்குசி சரணம்.