பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

35


மகளே வல்லாண்மை.

மகம் அறிவு தந்தை அறிவு.

(பழமொழி நானுாறு.)

மகன் பிள்ளையை இடுக்கியும், மகன் பிள்ளையை நடத்தியும்.

(யாழ்ப்பாண வழக்கு.)

மகன் செத்தாலும் சாகட்டும்; மருமகள் கொழுப்பு அடங்கினால் போதும்

(கொட்டம்.)

மகன் செத்தாலும் சாகட்டும்; மருமகன் தாலி அறுக்க வேணும். 17685


மகாதேவசி ஆடிடித்துப் பேயும் ஆடுகிறது.

மகா பட்டாதார்ச் செல்லாம் மானமாம்; மாட்டுக்காரப் பிள்ளைக்குச் சரணமாம்.

மகா புருஷர் மகிமை பிறவிக் குருடனுக்குத் தெரியுமா?

மகா பெரியவர் மண்டையிலே புழுத்தவர்.

(பழுத்தவர்)

மகாமகம் ஆனால் பார்க்கக் கூடாது. 17690


மகாமகம் பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு விசை வரும்.

மகாராஜன் கல்யாணத்தில் நீராகாரம் நெய் பட்ட பாடு.

மகாராஜன் பெண்சாதி மர்மச்சாரி, யாருடன் சொன்னாலும் திறமைக்காரி.

(மாநிலத்தில் சென்றாலும் இல்லாத திறமைக்காரி.)

மகாராஜன் மண்ணைத் தின்றால் மருந்துக்குத் தின்றாள் என்பார்கள்; பிச்சைக்காரன் மண்ணைத் தின்றால் வயிற்றுக்கு இல்லாமல் தின்றான் என்பார்கள். 17695


மகாராஜனோடு சொக்கட்டான் போடலாமோ

(ஆடலாமோ?)

மகாராஜா சத்ரபதி, அன்னசத்திரம் இராப்பட்டினி.

மகாலஷிமி பரதேசம் போனாற்போல.

(என்றானாம்.)

மகிமைக்கார மாப்பிள்ளை வந்திருக்கிறான் தேசப்பிலே.

மகிமைக்கு அஞ்சிய மருமகனே. எருமைக் கன்றைக் கொல்லாதே. 17700


மகிமை சுந்தரி, கதவை ஒஞ்சரி.

மகிகைப் பட்டவனுக்கு மரணம்; மாட்டுக்காரப் பையனுக்குசி சரணம்.