தமிழ்ப் பழமொழிகள்
41
மண்ணோடே பிறக்கலாம், உன்னோடே பிறந்ததில்
மண் திண்ணும் பாம்பு போல. 17830
மன்பான்டத்தில் இருப்பதைத் தோல் பாண்டத்தில் போடு.
மண் பானை பொங்கல் மணக்குதாம்; மாணிக்கத் தொந்திக்குப் பசிக்குதாம்.
மண் பிள்ளையாரை நம்பி ஆற்றில் இறங்காதே தம்பி.
மண் பிள்ளையானாலும் தன் பிள்ளையாய் இருக்க வேணும்.
மண் பூனை ஆனாலும் எலி பிடிக்கிறதென்று. 17835
மண் பூனை ஆனாலும் எலி பிடித்தால் சரி.
மண் பூனை எலியைப் பிடிக்குமா.
மண் மண்ணோடு; விண் விண்ணோடே.
மண் மாமியார் பண்ணினதும் மறைந்தாளாம் கிழவி.
மண் மாரி பெய்தால் மணல் வாரி விளையும். 17840
மண்மேல் இருந்து வழக்கு ஓரம் சொல்லுகிறதா?
மண் வாயும் இல்லை; மர வாயும் இல்லை.
மண் விற்ற காசும் பெண் விற்ற காசும் மண்.
மண் வெட்டிக் காம்புக்கு மரத்தைச் செதுக்கினால் அரிவாள் பிடிக்காவது ஆகாதா?
மண் வேலையோ புண் வேலையோ. 17845
மணக்க மணக்கச் சாப்பிட்டாலும் கிழக்கு வெளுக்க மலந்தான்.
மணக் கோலம் போய்ப் பிணக்கோலம் ஆச்சுது.
மணப்பறையே பிணப்பறை ஆவதும் உண்டு.
மணம் இல்லாத மலரும் மனைவி இல்லாத வீடும் பாழ்.
மணமகன் பிணமகன் ஆனான். 17850
மணமும் பிணமும் போகிற வீதியில் நின்று போகிறது.
மணல் காட்டுக் கிழங்கு என்றால் மேலாகவா கிடக்கும்?
மணல் வெட்டி ஊதல் அறியுமோ?
மணல் உழுது வாழ்ந்தவனும் இல்லை: மண் உழுது கெட்டவனும் இல்லை.
மணல் சோற்றில் கல் ஆராய்ந்தாற்போல். 17855
மணல் நிலம் தாரார்; கனி நிலம் வேண்டாம்; களர் நிலம் தந்தால் கைப்பாடு படலாம்.