தமிழ்ப் பழமொழிகள்
51
மலை கட்டுக் கரி ஆகுமா? மயிர் சுட்டுக் கரி ஆகுமா?
18100
மலைத்தவருக்குப் பலன் லபிக்கிறதா?
மலைத் தேன் முடவனுக்குக் கிட்டுமா?
மலை நெல்லிக்காய்க்கும் கடல் உப்புக்கும் உறவு செய்தவர் யார்?
மலைப் புளுகு கலப் புளுகாய் இருக்கிறது.
மலை பெரிதானாலுல் சிற்றுளியால் தகரும். 18105
மலை போல் இருக்கிற தேரும் சிறு சுள்ளாணியால் நிலை பெறும்,
மலை போலப் பிராமணன் போகிறானாம்; பின் குடுமிக்கு அழுகிறாளாம்.
மலை போலப் பிராமணன் மாய்த்தானாம்; அவன் உச்சிக்கு அழுதாளாம் பிராமனத்தி.
மலை போன்ற சாமிக்கு மலை போலப் படைக்க முடியுமா?
மலை மல்லிகைக்கு எதிர் பூத்ததாம் ஊமத்தை. 18110
மலை மீது இருப்பவரைப் பன்றி எப்படிப் பாயும்?
மலை மேல் இருக்கிறவனைப் புலி பாயுமா?
மலை மேல் ஏற்றிய விளக்குப் போல.
மலை மேல் மலையாக விழுந்தாலும் மனம் கலங்காத தீரன்.
மலையாளத்துக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கே. 18115
மலையாளத்து யானை பருக்கை தேய்ப்பது போல.
மலையாளம் பெய்து விளைகிற சீமை, தஞ்சாவூர் பாய்ந்து விளைகிற சீமை.
மலையில் விளைந்த மூலிகை ஆனாலும் உரலில்தான் மசிய வேண்டும்.
மலையில் விளைந்தாலும் உரலில்தான் மசிய வேண்டும்.
மலையிலும் மானம் பெரிது. 18120
மலையின் உயரம் மலைக்குத் தெரியுமா?
மலையின் வாயில் பொழுதும் நுளையன் வாயில் சோறும்.
மலையுடன் மண்ணாங்கட்டி எதிர்ப்பது போல.