தமிழ்ப் பழமொழிகள்
59
மா அளந்த படியைப் போல.
மா இடித்தால் மண்டிக் கொள்கிறது; கூழ் குடித்தால் கூடிக் கொள்கிறது. 18295
மா இருக்கிற மணத்தைப் போல் அல்லவா கூழ் இருக்கிற குணம்?
மா உண்டானால் பணியாரம் சுடலாம்.
மா ஏற மலை ஏறும்.
மாகனப் பட்டது எல்லாம் ஒரு திருணம்; மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.
மாகேச நவ பன்டித. 18300
மாங்கல்யப் பெண்ணுக்கு மாசம் இரண்டு பூசை.
மாங்காய் அழுகலும் மாப்பிள்ளையில் கிழமும் கிடையா.
மாங்காய்க் காலத்தில் மாங்காய் தின்னாவிட்டால், வீங்கித் தூங்கிச் சாவார்கள்.
மாங்காய்க்குத் தேங்காய் மருந்து.
மாங்காய்க்குத் தேங்காய்; வழுக்கைக்கு இளவெந்நீர்; பூங்கதலிக்குச் சுக்கு நீர். 18305
மாங்காய்க்குப் புளியங்காய் தோற்குமா?
மாங்காயில் பெரிசும் தேங்காயில் சிறிசும்.
மாசி ஈனா மரமும் இல்லை; தை ஈனாப் புல்லும் இல்லை.
மாசி என் மச்சின் மேலே.
மாசி என் மடியில் பணம். 18310
மாசிக் கடாவும் மார்கழி நம்பியானும்.
மாசிக் கரும்பும் மகர வாழையும்.
மாசிச் சரடு பாசிபோல் வளரும்.