80
தமிழ்ப் பழமொழிகள்
முதல் எடுக்கும்போதே தப்பட்டைக்காரன் செத்தான்.
முதல் எழுத்திலே வெள்ளெழுத்தா?
முதல் கோணல் முற்றும் கோணல்.
முதல் பணம் எங்கடா என்றால் என் கடா ஏரியில் மேயுது என்ற கதை.
முதல் பிள்ளை மூத்திரத்துக்கு அழும்போது இரண்டாம் பிள்ளை பாலுக்கு
- அழுகிறதாம்.
18790
முதல் பிறந்த பிள்ளை உரல் குழியை நக்குகிறதாம்; திருப்பதிக்குப் போனாளாம்
- திரும்ப வரம் கேட்க.
முதல் பிறந்த குழந்தை உரல் குழியை நக்குகிறதாம்; மூன்றாவது பிள்ளை
- முந்தியை இழுக்கிறதாம்.
முதல் பிறந்த பிள்ளை உரல் பணையை நக்குகிறதாம்: தேவடியாளுக்குப் பிறந்த
- பிள்ளை திரட்டுப் பாலுக்கு அழுததாம்.
முதல் பிறந்த பிள்ளை முத்துப் பிள்ளை; பின்னே பிறந்த பிள்ளை மாவுப்பிள்ளை.
முதல் மடைக்கு எருப் போடு; கடை மடைக்கு வரப்புப்போடு. 18795
முதலியார் வீட்டு நாய்க்கு முத்துமாலையின் பெருமை தெரியுமா?
முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.
முதலில் எடுத்துச் செலவிடாதே.
முதலிலே கெட்டிக்காரன், முடிவிலே சோம்பேறி.
முதலிலேயே துர்ப்பலை; அதிலும் அவன் கர்ப்பிணி. 18800
முதலுக்கு மிஞ்சினால் மோசம்.
முதலுக்கு மோசமாய் இருக்கிறது: லாபத்துக்குச் சண்டை போடுகிறதா?
முதலே துர்ப்பலை; அதிலும் கர்ப்பிணி.
முதலைக்கு இல்லை நீச்சும் நிலையும்.
முதலை தன் இடத்தில் மலை ஒத்த யானையையும் இழுத்துச் செல்லும். 18805
நாயின் காலை விட்டுப் புஸ்க மரத்தின் வேரைப் பிடித்தது போல.