பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

83


முரட்டுத் துலுக்கனும் முட்டாள் நாயக்கனும் பட்டாளத்தைத் தவிர வேறு

வேலை இல்லை.
(பட்டாளத்துக்கு Fit.)

முரட்டுப் பெண்டாட்டி, இருட்டு அறை, சுருட்டுப் பாய்.

முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும். 18860


முரடனுக்கு மூங்கில் தடி.

முருக்கம்பூச் சிவந்ததனால் முடிப்பார்களா?

முருக்குப் பருத்தென்ன? தூணாகப் போகிறதா?

முருகனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை; மிளக்குக்கு மிஞ்சின வைத்தியமும் :இல்லை.

முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம். 18865


முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா?

முருங்கக் கீரை முட்ட வாயு அகத்திக் கீரை அண்ட வாயு.

முருங்கைக் கீரை வெந்து கெட்டது; அகத்திக் கீரை வேகாமல் கெட்டது.

முருங்கைக்கு முந்நூறு தத்து.

முருங்கை பெருத்துத் தூண் ஆகுமா? 18870


முருங்கையை ஒடித்து வளர்க்க வேணும்; பெண்ணை அடித்து வளர்க்க வேணும்.

முலைக்குத்து வலி சவலைக் குழந்தை அறியுமா?

(தண்டலையார் சதகம்.)

முலை கொடுத்து வளர்த்தவள் மூதேவி, முன்றானை போட்டவள் சீதேவி.

முலை சரிந்தால் வயிறு தாங்கும்.

(முலை விழுந்தால்.)

முழங்காலில் கட்டின தாலிபோல. 18875


முழங்கைப் புண்போல முனை குலைந்து நிற்கிறது.

முழங்கையில் இடித்த சுகம் போல இருக்கும் மூத்தாள் பெண் வாழ்வு.

முழங்கையில் இடித்த சுகம் போல மூத்தாள் வாழ்கிறாள் புக்ககத்திலே.

முழங்கையில் பட்ட சுகம் போல.

முழங்கையில் பட்ட சுகமும் மூத்தாள் பசங்களின் வாழ்க்கையும். 18880