தமிழ்ப் பழமொழிகள்
85
முளைத்ததே மூன்று மயிர்; அதிலும் இரண்டு புழுவெட்டு.
முளைத்து மூன்று அமாவாசை ஆகவில்லை.
முளைத்து மூன்று இலை விடவில்லை.
முளைப்பாரைப் புதைப்பார் உண்டோ?
முளையில் உண்டானதுதான் முற்றும் 18910
முனையில் கிள்ளாதது முற்றினால் கோடரி கொண்டு வெட்ட வேண்டும்.
முளையில் நகத்தால் கிள்ளிவிடுவதை முற்ற விட்டுக் கோடரி கொண்டு பிளக்க வேண்டும்.
முளையிலே அறுத்தவள்.
முளையிலே கிள்ளி எறிய வேண்டும்.
முற்பகல் கண்டான் விறன் கேடு, தவி கேடு பிற்பகல் கண்டுவிடும், 18915
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்,
முற்படச் செய்யும் பயிரே நன்று.
முறப்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பில் மூண்டது.
முற்றக் கல்வி பேசாதே.
முற்றத்தில் வந்தவர் முப்பழி செய்தவர் ஆயினும் வா என்று
அழைக்க வேண்டும். 18920
முற்றத்து முல்லைக்கு மணம் இல்லை.
முற்றின மரத்தில்தான் வைரம் இருக்கும்.
முற்ற நனைந்தவனுக்கு ஈரம் இல்லை; முழுதும் கெட்டிவனுக்குத்
- துக்கம் இல்லை.
முற்ற நனைந்தார்க்கு ஈரம் இல்லை; முக்காடு போட்டிவளுக்கு வெட்கம் இல்லை.
முற்ற நனைந்தார்க்கு ஈரம் இல்லை: மூக்கறுபட்டவளுக்கு நாணம் இல்லை. 18925
முற்றும் முடிவும் பார்த்து முயல்.
முறத்து அடி பட்டாலும் முகத்து அடி படல் ஆகாது.
முறித்து விடுவது எளிது; சேர்ப்பதுதான் கஷ்டம்.
முறிந்து ஓடும் விமானத்துக்குப் பறந்து ஓடி ஒட்டுப் போடுகிறவன்.