பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

7




பெண்டாட்டி மெய்க்கப் புழைக்கடை வெட்டியது போல.

பெண்டாட்டியுடன் கோபித்துப் பரதேசம் போவார் உண்டா?

(யோவாரா?)

பெண்டாட்டியை அடிக்கடி பிறந்தகத்துக்கு அனுப்பாதே.

பெண்டாட்டியைத் தாய் வீட்டில் விட்டவனும் பூவைக் குரங்கு

கையில் கொடுத்தவனும் போல.

பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல். 17020


பெண்டு இரண்டு கொண்டால் பெரு நெருப்புச் சாமளவும். பெண்டு

இல்லாதவன் பிணத்தைக் கட்டி அழுத கதை.

பெண்டுகள் அம்பலம் பொழுது விடிந்தால் கூத்து.

பெண்டுகள் இருந்த இடம் சண்டைகள் பெருத்த இடம்.

(பெண்டுகள் இருப்பிடம் பெரிய சண்டையாம்.)

பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையாம். 17025


பெண்டுகள்கூடச் சண்டைக்கு வருவார்கள்.

பெண்டுகள் கூத்துப் பேய்க் கூத்து.

பெண்டுகள் சமர்த்து அடுப்பங் கரையில்தான்.

பெண்டுகள் சமர்த்துச் சமையற்கட்டிலும் படுக்கைக் கட்டிலிலுத்தான்.

பெண்டுகள் செட்டி. 17030


பெண்டுகள் சோற்றுக்குத் தண்டம் இல்லை.

(தடை இல்லை.)

பெண்டுகள் வைத்தியம்,

பெண்டுகளாலே பெருமாள் குடி கெட்டது.

பெண்டுகளுக்குப் பெற்றோரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் மூப்பு இல்லை.

பெண்டு கொண்டதும் போதும்; பிண்டு விழுந்ததும் போதும். 17035


பெண்டு மிரண்டால் வீடு கொள்ளாது.

பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு; பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.

பெண்ணாய்ப் பிறப்பதிலும் மண்ணாய்ப் பிறக்கலாம்.

பெண்ணாய்ப் பிறப்பதுவும் பாவம்; பெண்ணோடே கூடிப்பிறப்பதுவும் பாவம்.

(யாழ்ப்பாண வழக்கு )

பெண்ணிடம் அகப்பட்ட பணமும் ஆணிடம் அகப்பட்ட

குழந்தையும் உருப்படா. 17040