பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

89


மூக்கு மயிர் பிடுங்கிக் கயிறு திரிக்கலாமா?

மூக்கு மயிர் பிடுங்கினது போல வருத்தம் வரும்,

மூக்கை ஏன் பிடிப்பது? மூதேவி வாசத்துக்கு அடையாளம்.

மூக்கைக் கின்னிப் போக்குக் காட்டினது போல.

மூக்கைப் பிடித்தால் அண்ணாந்து பார்க்க இடம் இல்லை. 19000

(அண்ணாத்து பார்க்கத் தெரியாது.)


மூக்கைப் பிடித்தால் சீவன் போகிறது.

(போகிற வேளை.)

மூக்கைப் பிடித்தால் வாயை ஆ என்னத் தெரியாது.

மூங்கில் இலை மேலே துரங்கும் பனிநீரே.

(பனிபோலே.)

மூங்கில் பாயும் முரட்டுப் பெண்டாட்டியும்,

மூச்சுப் பிடித்தால் வயிறு நிரம்புமா? 19005


மூஞ்சியில் மூன்றாம் பேங்து வைத்தாற் போல.

மூஞ்சியிலே அடித்தால்போல் பேசுகிறான்,

மூஞ்சியிலே கரியைத் தீற்றுகிறான்.

மூஞ்சியைக் காட்டுகிறான்.

மூஞ்சியைப் பார், முகத்தைப்பார். 19010


மூஞ்சையப்பன் முகத்தைப் பார்.

மூட்டை அளக்கிறான்.

மூட்டைக்காரச் சுவாமி.

மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே புத்தி.

மூட்டை துக்கி முத்தையன். 19015


மூட்டைப்பூச்சி உதிரத்தைச் இரசிக்கிறதைப்போலக் குடிப்பதா?

மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?

மூடர்கள் சேர்க்கையில் தப்பாமல் கெடுதி வரும்.

மூடர் கூட்டுறவு முழுதும் அபாயம்.

மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே. 19020


மூடருக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு.

மூடரோடு ஆடிய நட்பு. கடுவழியில் கட்டை ஊடாடிய கால்.

மூடன் உறவிலும் விவேகி பகை நலம்.

மூடன் சண்டை மூட்டுப் பிரிக்கும்; மோர்க்கடன் வீட்டைத் தேடும்.

மூடன் போல வாயாடுகிறதா? 19025


மூடனாய் இருக்கிற பிள்ளையினாலே எப்போதும் நஷ்டமே வரும்.

மூடனுக்குக் கோபம் மூக்கின் மேல்,