பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

95


மெய்ம்மை சாற்ற வையம் ஏற்றும்.

மெய் மூன்றாம் பிறை, பொய் பூரண சந்திரன்.

மெய்யது நன்றி இடும்.

மெய்யனுக்கு ஐயம் இல்லை: பொய்யனுக்கு லாபம் இல்லை.

மெய்யான சத்தியன் வேதவாசகன். 19140


மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால் பொய் போலும்மே

பொய் போலும்மே.

மெய்யைப் பொய் அழிக்குமா?

மெல்லச் சாப்பிட்டால் கொள்ளை போமா?

மெல்லப் பாயும் தண்ணி கல்லையும் குழியப் பாவும்.

(உருவச் செல்லும்.)

மெல்லவும் மாட்டாமல் சொல்லவும் மாட்டாமல் விழிக்கிறான். 19145


மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விழிக்கிறான்.

மெல்லிசு நோனா எல்லிட்டுக் கூத்தியாள்.

மெல்லியலாள் தோள் சேர்.

மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருவிச் செல்லும்.

(கல்லிலும் குழியச்செல்லும்.)

மெலட்டு மினுக்கு: திருவாரூர் திப்பிசம். 19150


மெலிந்தவனுக்கு மெத்தப் பலன்; மேனி மினுக்கிட்டவளுக்கு

மெத்தக் கசம்.

(மெத்தச் சுகம்.)

மெலுக்கிலே அலைக்கழிவு.

மெழுகாய் உருகுகிறான்.

மெழுகாலே ஆகிலும் வெள்ளைத் தலை வேணும்.

மெழுகின வீட்டில் நாய் புகுந்தது போல. 19155


மெழுகுப் பிள்ளையார் போலத் தொளுவு தொளுவு என்று இருக்கிறது.

மெள்ள இருந்துதான் தள்ளவேணும் பகையை.

மெள்ள மெள்ள வந்தாளசம்; கட்டில் மெத்தை போட்டாளாம்.

மெள்ள மெள்ள வந்தானாம்; மிளகு என்றானாம்; சுக்கு என்றானாம்.

(மெள்ள மெள்ள வந்தான், மிளகு சுக்கு என்றான்.)

மெனக் கெட்ட பூதி தினைக்குத்தப் போனாளாம். 19160