பக்கம்:தமிழ்மாலை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

தம்முடன் பயின்ற உடன்மாணவர் இசுலாமிய நண்பர் ஒருவரைக் கண்டபோது கண்ணிர் மல்கியதும் குறித்துள்ளமை அவர்தம் இளகிய உள்ளத்தைக் காட்டுகின்றன.

முடங்கல்கள் உலக அறிஞர்களால் எழுதப்பெற்ற ஒரு பெருங்கருவூலம் போலக் கொள்ளப்படும் பாங்கில் அடிகளார் முடங்கல்களும் அக்கருவூலங் களாகின்றன. - உலகில்சான்றோர்களின்நாட்குறிப்புகிடைத்ததற்கரியபுதையல்களாக உள்ளன. அறிஞர் சாமுவேல் பெலிசு, அறிஞர் சான் எவெயின் எழுதிய நாட் குறிப்புக்கள் உலகப்புகழ்பெற்றவை. அடிகளார்நாட்குறிப்புமுழுமையாகஒளிவு மறைவின்றி, விடுத்தல் ஒதுக்கல், நீங்கல் இன்றி வெளியிடப்பெறுமானால் அறிவியல்வாழ்வுமட்டுமன்றி.நூலாக்கத்திறன் மட்டுமன்றி, காலக்குறிப்புகள் மட்டுமன்றி, புலமைத்திறம் மட்டுமன்றி, வாழ்வியல் நெறிகளும், நூலார்வத் திறமும், காதற் குறிப்புகளும் கூட வழிகாட்டும். அத்துடன் வாழ்வில் கவனங்கொள்ளாது விடுக்க வேண்டியவற்றையும் அறிவுறுத்தும் ஒளிப்பாதையாகும்.

ஒன்றைக் குறித்துக் காட்டி அடிகளார்தம் நாட்குறிப்பைப் பற்றி நிறைவேற்றுவதை இன்றியமையாததாகக் கருதலாம். அடிகளார் 15.9.1950-இல் புகழுடம்படைந்தார். அந்நாளுக்கு ஒரு திங்கள் முன்னர், அதாவது 148.1950 வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார்.இந்நாளுக்குப்பத்துநாள்களுக்கு முன்நாள் அதாவது 48.1950 நாட்குறிப்பு அறிவிக்கும் நயப்பும் வியப்பும் எழுப்பும் எழுத்து பின்வருவது. -

“இன்று பெரியார் ஈ.வே. இராமசாமி நாயக்கர் ஆடலரசுடன் காண வந்தார். ஒரு மணி நேரம் உரையாடினேன்.” இதனை உவந்து எண்ணி வாழ்க தமிழும் தமிழினமும்’ என்று வாழ்த்த வேண்டியுள்ளது. பதிப்பு வரலாறு

அடிகளாரின் கையால் உருவான நூல் மலைகளைக் கண்டோம்.இவை 4 வகைகளில் அமைந்த 16 இயல்களில் 85 நூல்களாகும். 65-இல் நான்கு ஆங்கில நூல்கள். அவற்றுள் அவர்தம் தமிழ் நூல்களின் அவர்தம் ஆங்கில ஆக்க நூல்கள் 2. அவர்தம் ஆங்கில வடிப்புகள் 2 கூட்டுமொத்தமாக 8200 பக்கங்களில் அடிகளார்நூல்கள் நிறைவுபெறுகின்றன.

அடிகளார்நூல்களில் பதிப்பு:வரலாறு,அவர்தம் நூலாக்க உள்ளீடுகள் அடிகளார் தம் நூல்களைப் பற்றிய அருமைகள் பற்றிக் கூறி, எழுதி நிறைவேற்றுவதுதான் இப்பேச்சிற்கும்.இதன்வழி எழுத்துலகிற்கும் மரபாகும்; முறையுமாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/112&oldid=687180" இலிருந்து மீள்விக்கப்பட்டது