பக்கம்:தமிழ்மாலை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|[]S

'யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுத்வும் ஆற்றல் பெறுவீர்கள்”

என்று அடிகளாரின் தன்னம்பிக்கை அறிவிப்பின்படி நாவாலும் கையாலும்

ஒவ்வொருவரும் மலையாகலாம்; இயலாது போனால் குன்றாக ஆகலாம்.

அடிகளார் திறம்பற்றிய இன்றியமையாச் சுவைச் செய்தியை இங்குக் காட்ட வேண்டும்:

“அடிகளார் எழுத்தில் மட்டும் தேன் சொட்டவில்லை; அவரது பேச்சு பலாச்சுவையாய்ப் பைந்தமிழர்க்கு இனிக்கிறது’

என்னும் இச்சுவைவடிப்பு:இவ்வறக்கட்டளையை நிறுவியுள்ள டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வடிப்பு.

"உலகம் உள்ளளவும் தம் தமிழ்த்தொண்டு நிலைபெற்றுப் பெரும்பயனும் பெரும்புகழும் விளைக்கும்’

என்று அடிகளார் தம்பொறுப்பில் விட்டு எழுதியதைநினைவிற்பதிக்கவேண்டிய இப்பொழிவை நிறைவேற்றுகின்றேன்.

நிறைவின் முடியாக,

அறக்கட்டளை நிறுவிய டாக்டர் கலைஞருக்கு நெஞ்சம் கனிந்த பாராட்டு:

- நன்றி.

இராசராசன் விருது படைத்த முன்னாள் துணைவேந்தர் முனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும்: இன்று நடைமுறைப்படுத்திய இந்நாள் துணைவேந்தர் தமிழ்நெஞ்சத்து முனைவர் அவ்வைநடராசனார்க்கும் வாழ்த்தும் பாராட்டும்.நன்றியும்; இன்று நிகழ்த்திய இலக்கியத்துறையினர்க்கு அனைத்து நன்றியும் செவிமடுத்து உவப்பித்த பெருமக்களுக்கு உளந்தோய்ந்த நன்றி.

வணங்கி அமைகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/115&oldid=687183" இலிருந்து மீள்விக்கப்பட்டது