பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


மிளிர்வதும்-தமிழரது வாழ்வும் வரலாறுமாக விளங்குவதும் பொருளதிகாரமே என்று கூறலாம். இதனைத் தன்னகத்தே கொண்டுள்ள தொல்காப்பியம் தமிழர்க்கு உயிர்நாடி போன்றதாகும்."

(4) தொல்காப்பியர்க்கு முற்பட்ட நூல்கள் தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 1600 நூற்பாக்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்குப் பதினாறு இடங்கள் வீதம் தொல்காப்பியர் தம் காலத்தவரும் தமக்கு முற்பட்டவருமாக வாழ்ந்த இலக்கண இலக்கிய ஆசிரியர்களைப் பற்றிக் கூறி யுள்ளார் :

"செவ்வி தென்ப சிறந்திசி னோரே" (உயிர் மயங்கியல்-96)

" என்மனார் புலவர்" (குற்றியலுகரப் புணரியல்-78)

"உளவென மொழிய உணர்ந்திசி னோரே" (வேற்றுமை மயங்கியல், 34)

"தோன்றுமொழிப் புலவரது பிண்டம் என்ப" (செய்யுளியல், 185) "தோலென மொழிய தொன்னெறிப் புலவர்"

(செய்யுளியல், 230) "புலனென மொழிய புலனுணர்ந் தோரே"

(செய்யுளியல், 238) "நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே"

(toņúliusb, 27) "நூலென மொழிய நுணங்குமொழிப் புலவர்" - (மரபியல், 98)

4 Among the sources which throw light upon the condition, political and social, of the Tamil people in