பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 145


"முந்தை யிருந்து கட்டோர் கொடுப்பின்
நஞ்சு முண்பர் கனிமா கரிகர்."

(நற்றிணை-355)

குறுந்தொகை

1.

"மலரினும் மெல்லிது காமஞ் சிலரதன்
   செவ்வி தலைப்படு வார்."

(குறள்-1289)

"ஐதே காமம்"-காமநோய் நுண்ணியது; மெல்லியது)

(குறுந்தொகை-217)

2.

"பேதைமை யொன்றோ பெருங்கிழமை
   யென்றுணர்க நோதக்க நட்டார் செயின்."

(குறள்-805)

"பேதை மையாற் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ."

(குறுந்தொகை-230)

3.

"வாளற்றுப் புற்கென்ற கண்னு மவர்சென்று
   காளொற்றித் தேய்ந்த விரல்."

(குறள்-1281)

"விங்கிழை நெகிழ விம்மி யீங்கே
    எறிகட் பேதுற லாய்கோ டிட்டுச்
    சுவர்வாய் பற்றுகின் படர்......"

(குறுந்தொகை-358)

பதிற்றுப்பத்து

1. "நின் மறங்கூறு குழாத்தர்" (நான்காம் பத்து, 9.) வீரர், தம் தலைவரது வீரத்தையே எடுத்தோதி மேம்படுதல் இயல்பு. இதனை,

"என்னைமுன் கில்லன்மின் தெவ்விர் பலரென்னை
    முன்னின்று கன்னின் றவர்".

என்று வீரர் தம் தலைவனது சிறப்பைக் கூறும் குறளில் (771) காண்க. .

த-10