இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
146
தமிழ் மொழி-இலக்கிய வரலாறு
2. "தொலையாக் கொள்கைச் சுற்றத்தார்."
(ஏழாம் பத்து, 10)
தம்மால் சுற்றப்பட்ட தலைவன் செல்வம், வலிமை முதலியன அற்றபோதும், அவனை நீங்காது பழைமை பாராட்டும் பண்பினர் ஆதலின் சுற்றத்தார் இங்ங்னம் சிறப்பிக்கப்பட்டனர். இக்கருத்தை,.
"பற்றற்ற கண்ணும் பழைமையா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள. ’’
என்னும் குறளில் (521) காண்க.
3. "கனவினால் கல்கா தவரைக் கனவினால்
காண்டலி னுண்டென் னுயிர்." (குறள்-1213). "கனவினும் பிரியா வுறையுளொடு... மீனொடு புரையுங் கற்பின் வாணுதல் அரிவை..." (ஒன்பதாம் பத்து-9)
பரிபாடல்
1. "காமக் கணிச்சி யுடைக்கு கிறையென்னு .
கானுத்தாழ் வீழ்த்த கதவு.' (குறள்-1251)
"காமக் கணிச்சியாற் கையறவு வட்டித்துச் சேமத் திரைவீழ்த்துச் சென்றமளி சேர்குவோர்." (பரிபாடல் 10, வரிகள் 34-35)
2. இலனென்னும் எவ்வம் உரையாமை யிதல்
குலனுடையான் கண்ணே யுள.' (குறள்-223).
"இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன் அல்லது வெஃகி வினைசெய்வார். ’’ (பரிபாடல் 10, வரிகள் 87-88)
3. "ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். ’’ (குறள்-581).