இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் மா. இராசமாணிக்கனார் 147
"புடைவரு சூழல் புலமாண் வ்ழுதி மடமயி லோரும் அனையவ ரோடுங் கடனறி காரியக் கண்ணவ ரோடுகின் சூருறை குன்றிற் றடவரை யேறி. (பரிபாடல் 19, வரிகள் 20-24)
கலித்தொகை
1. "காமமும் காணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பி னகத்து." (குறள்-1163)
"நலிதரும் காமமுங் கெளவையும் என்றிவ் வலிதின் உயிர்காவாத் துரங்கியாங் கென்னை நலியும் விழுமம் இரண்டு. (கலி-142)
2. "காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி. ’’ (குறள்-1131)
"காமக் கடும்பகைமிற் றோன்றினேற் கேமம் எழினுத லீத்தவிம் மா." (கலி-139)
3. "குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். ’’ (குறள்-5491
"குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை விடுவழி விடுவழி சென்றாங்கவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே." (கலி-130)
4. "துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து" (குறள்-1218)
"தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமையெடுத்தும் பற்றுவென் என்றியான் விழிக்குங்கால் மற்றுமென் நெஞ்சத்துள்ளோடி யொளித்தாங்கே துஞ்சாகோய் செய்யும் அறனிலவன்." (கலி-144)