பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கம் 149


2. "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

    செய்க்கன்றி கொன்ற மகற்கு ." (குறள்-110) 
  "நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
   செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென  
   அறம்பா டிற்றே ஆயிழை கணவ." (புறம்-34)

3. "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

     அதுநோக்கி வாழ்வார் பலர்."  (குறள்-528)
    "வரிசை யறிதலோ வரிதே பெரிதும்
     ஈத லெளிதே மாவண் டோன்றல்
     அதுகற் கறிந்தனை யாயிற் 
     பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே." 
                                   (புறம்-121) 

4. "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குங் தன்மகனைச்

   சான்றோன் எனக்கேட்ட தாய்." (குறள்-89)
   நரம்பெழுந் துலறிய கிரம்பா மென்றோள்
    ..........................................
   ஈன்ற ஞான்றினும் பெரிதுவக் தனளே". (புறம்-278)

பத்துப் பாட்டு -

1. "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

   அதுநோக்கி வாழ்வார் பலர்." (குறள்-528)
  "வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
   பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த"
          (சிறுபாணாற்றுப்படை, வரிகள் 217-218)

2. "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல (து)

   ஊதியம் இல்லை உயிர்க்கு". (குறள்-231)  
  
  "உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
   திவார்மே னிற்கும் புகழ்." (குறன்-232)