பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

டாக்டர். இராசமாணிக்கனார்

சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால், அவர்தமக்கு வள்ளுவர் நீண்ட காலத்துக்கு முற்பட்டவராகவும், அவர் அறநூலின் இறவாச் சிறப்பு அங்கீகரிக்கப்படுவதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதன் அடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப் பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருத்தல் வேண்டும்."11

    4. கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கெளடில்யர் இயற்றிய பொருள் நூலில் கண்ட சில செய்தி களும் திருக்குறள் பொருட்பால் பகுதிகள் சிலவும் கருத்தில் ஒன்றுபட்டிருத்தலால், திருவள்ளுவர் கெளடில்யரது பொருள் நூலைப் படித்திருக்கலாம் என்று ஒருசார் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இங்ஙனம் கொண்டு, திருவள்ளுவர் காலம். கி. மு. முதல் மூன்று நூற்றாண்டுகட்கு உட்பட்டதாகலாம் எனக் கூறுகின
    11. நாவலர் சோமசுந்தர பாரதியார், திருவள்ளுவர். பக்கம், 4.
    12. (1) திருக்குறளில் காணப்படும் ஒரு சில சொற்களையும், வடமொழிச் சொற்களையும், தொடர்களையும் கொண்டும், குறளில் காணப்படும் கருத்துகள் சில வடமொழி நூல்களில் காணப்படுதல் கொண்டும், குறள் க்ஷக்ஷ பிந்தியது என்றும் கூறும் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் கூற்றும், அதனைப் பேராசிரியரும் பெருநாவலரும் ஆகிய டாக்டர்" சோமசுந்தர பாரதியாரவர்களும், திருப்பதி கீழ்க்கலை ஆராய்ச்சிக் கூடத்துத் தமிழாராய்ச்சித்துறை அறிஞரான திரு. பழகியப்ப பிள்ளையவர்களும் மறுத்து எழுதியுள்ள கட்டுரைகளும் எனது 'திருவள்ளுவர் காலம்' என்னும் தனி நூலில் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படித்தல் நலம்.
       (2) v. R. R. Dikshitar, Studies in Tamil Literature:
           and Hiatory, pp. 138, 150–176.