பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167


(2) புறநானூற்றின் காலம்

முன்னுரை --

வரலாறு (History) என்பது எல்லா நாடுகளிலும் முதன் முதல் பாக்கள், கதைகள் வாயிலாகவே தோன்றியது. அப்பாக்களும் கதைகளும் காலஞ்சென்ற வீரர், அரசர், நல்லோர்,தியோர் இவர்தம் வரலாறுகளையோ வரலாறுகளிற் காணத்தக்க சிறப்பான நிகழ்ச்சிகளையோ பற்றியனவாக இருந்தன. இங்ஙனம் முதன் முதலில் வரையப்பட்ட பாடல்களும் கதைகளும் பிற்கால அறிஞர்க்கு வரலாறு சுட்டும் அடிப்படையாக விளங்கின. மேல் நாட்டில் முதல்முதல் இனிய முறையில் வரலாறு எழுதத் தொடங்கிய ஆசிரியர் எரடோட்டஸ் (Herodotus) என்பவர். அவர் காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டாகும்.”

பின்னர்ப் படிப்பினை பயக்கத்தக்க முறையில் வரலாறுகள் எழுந்தன. அங்கனம் வரைந்தாருள் முதல்வர் துசிடியஸ் என்பவர். இம்முறையில் எழுதப்பட்ட வரலாறே சிலப்பதிகாரம் என்னும் முத்தமிழ்க் காவியம். ஆயின், முற்கூறியவை அரசர்,அலுவலர், தலைவர் முதலியோர்களைப் பற்றிய அரிய நிகழ்ச்சிகளைக் கொண்ட வரலாறுகள் ஆகும். அவை இனிய செய்யுள் நடையிலும் உரைநடையிலும் யாக்கப் பெற்றவை. அத்தகைய வரலாற்று நூல்களை ஒரளவு ஒத்துக் காண்பன புறநானூற்றுப் பாக்கள் என்னலாம். என்னை? சேர, சோழ, பாண்டியர் ஆகிய நெடுநில மன்னர், மாரி போன்ற குறுநில மன்னர், கோவூர் கிழார் போன்ற புலவர் ஆகியோர் வரலாறுகளைப் புறநானூற்றுப் பாடல்களைக் கொண்டே ஏறத்தாழ வரைந்து முடிக்கலாம் ஆதலின் என்க. - புறநானூறு

புறநானூற்றுப் பாடல்கள், பழங்கால நிகழ்ச்சிகளைப் பிற்காலத்தார் பாடி வைத்தவை போன்றவை அல்ல.

3. H.F. G. Teggart, Theory of History, pp. 18–22.