பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

அரசர்க்கு உணர்த்தி' எனச் சிலப்பதிகாரத்தில் குறிக்கப் பெறல்-நெடுந் தூரம் கடலிற்சென்று நிலங் கண்டு, அந் நிலத்துத் தன் அடிகளை வைத்து, ஆண்டுள்ள கடல் அலம்பும்படி நின்றதேயாம்.பேரரசன் தன் அடிகளைப் பாறைகளிற் பொறித்து அவற்றை நீர் அலம்பும்படி வைக்கும் செய்தி ஜாவாவில் ரீ பூர்ணவர்மன் கல்வெட்டுகளிற் காணப்படுகிறது.

பூரீமானும் பூர்ணவர்மனும் அவனிக்குப் பதியும் அடி வைத்தவனுமாகிய தருமா நகரத் தலைவனுடைய விஷ்ணு அடிகளை ஒத்த இணை அடிகள்' (Ind. Ant. II. 355 -358). இது யவத்வீபத்துச் சீர் அருடன் யாற்று நடுவிலுள்ள பெரும் பாறையில் நீர் அலம்பு நிலையில் உள்ளது. இங்ஙனம் அடி பொறிக்கும் வழக்கம் நெடியோன் கால முதல் அங்கு உண்டாயிற்று என்று உய்த்துணரலாம்.

இங்ஙனம் நெடியோன் பெருங் கடலகத்து நிலங் கொண்ட செய்தி மதுரைக் காஞ்சியுள்,

" வானியைந்த இருமுந்நீர்ப்

பேஎநிலைஇய இரும்பவ்வத்துக்

கொடும்புணரி விலங்குபோழ சீர்சான்ற வுயர்கெல்லின் ஊர்கொண்ட உயர்கொற்றவ'

என்று (வரி 75-88) குறிக்கப்படல் காண்க. நெல்-சாலி; நெல்லின் ஊர். சாலியூர். இன்றைய சாரியூர் (Sarhl). இது ஜாவாத் தீவில் மதுரை என்ற தலைநகர்க்கு நான்கு கல் தொலைவில் உள்ள கடற்றுறைப் பட்டினம்.

"ஈண்டு மிகப் பிற்பட்ட காலத்தும் இந்நாட்டை வென்று கொண்ட மாறன் பெயரும் அவன் மதுரையும் (சுமதுரா) பாண்டியர் நூலில் குறித்த சாலியூரும் சேர வருவதலான், இந்நாடு முதலில் தென்னாட்டுப் பாண்டியராலே கொள்ளப்