பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177


பட்டதாக நன்கு தெளியலாம்...இவன் பொன்படுதீவங் கொண்ட சிறப்பையே போற்றி இவன் சய மாகீர்த்தி' எனவும், நெடியோன்' எனவும் புகழ் பெற்றனன்... இவன் வென்றுகொண்ட பிறநாடு மலயம் என இன்றுவரை வழங்குதலும் இவனுடைய பொதியப் பொருப்பாகிய 'மலயம்' பற்றியதாகும். மதுரை என்பது, கீழ்க்கடலகத்து யவத்தீவத்தை அடுத்து இப்போதுள்ள தீவாகும். இது முன்னர் ஒன்றாக இருந்ததென்ப. இச் சாவகத் தீவுடன் சங்க காலத்தில் வாணிகம் சிறக்க நடந்தது என்பதை மணி மேகலையால் அறியலாம்...சாவகத் தீவில் பல படியாகப் பகுப்புண்ட பெருநிலப் பெயர்கள் இன்றைக்கும் பாண்டியன், மதியன், புகார், பாண்டிய வாசம், மலையன்கோ, கந்தளி, செம்பூட்சேஎய்' என வழங்குதல் காணலாம். குறிஞ்சி, செங்கரை' என்பன ஆண்டுள்ள குளங் களின் பெயர்கள்... நெடியோன் எனப்பட்ட பாண்டியன், அக்கரையில் உள்ள ஆழி, தன் பாதத்தை அலம்பும்படி நின்றவன்’ என உணர்தலே பொருந்திய தென்க. இக் காரணத் தானே. மூவுலகும் ஈரடியால் அளந்தவனாகிய நெடியோனை ஒப்ப நின்றான் என்பது பற்றி, நெடியோன்" என்றார். இத்தகைய சிறந்த நெடியோன் வழித் தோன்றலாதல் பற்றியே, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன், - " முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

பரந்துபட்ட வியன்ஞாலம்

தாளில் தந்து தம்புகழ் கிறீஇ

ஒருதா மாகிய வரவோ ரும்பல்” எனக் குடபுலவியனாரால் புறப்பாட்டில் (18) ஏத்தெடுக்கப் பெற்றான் என்க."

22. இப்புதிய-அரிய செய்தியை விளக்கிய பெருமை பெரும்புலவர் ரா. இராகவையங்கார் அவர்கட்கே உரியது.-- தமிழ் வரலாறு. பக். 322-343

த-12 - . . . . .