பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

217



3.“அழுந்து படு விழுப்புண் வழும்புவாய் புலரா” 97

“விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை எடுத்து” -குறள் 776

4.“மருந்துய ரவலந் தீர்க்கு
மருந்து பிறி தில்லையா னுற்ற நோய்க்கே.” 140

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.” -குறள் 1102

5.“ஆள்வினைக்கு அகறி யாயின் இன்றொடு” 205

“ஆள்வினையுடைமை” -குறள் அதிகாரம் 62

6.“ஐதே சும்ம விஷ் வுலகு படைத் தோனே” 240

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான்” -- திருக்குறள் 1062

7.“முந்தை மருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நளிநா கரிகர்.” 355

“பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.” -குறள் 580

8.“உயிர்செலத் துணைதரு மாலை
செயிர்தீர் மாரியொ டொருங்குதலை வரினே.” 364