பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


“மாலையோ வல்லை மணந்தார்

உயிருண்ணும் வேலை வாழி பொழுது”
-குறள் 1221

புறநானூறு முதலிய தொகை நூல்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் நற்றிணைத் தொடர்கள் சில பயின்று வருவதைக் காணலாம்.

1.“எம்மனோரில் செம்மலும் உடைத்தே”

45

“நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே”

-புறநானூறு 47

2.“கடியுடை வியனகர்க் காவல் விேயும்”

156

“கடியுடை வியனக ரவ்வே”

-புறநானூறு 35

3.“கிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய......”

- 289

“கிலம் பெயரினும் கின்சொல் பெயரல்”

-புறநானூறு 3

4.“செம்மறு கொண்ட வெண்கோட் டியானை”

151

“வெண்கோட் டியானை சோணை படியும்”

-குறுந்தொகை 75

5.“அழுமே தோழியவர் பழமுதிர் குன்றே

88

“பழமுதிர் சோலை மலைகிழ வோனே”

-திருமுருகாற்றுப்படை