பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வாழ்த்துப் பகுதியில்,"ஆதலால் ஈண்டுப் பாலைத் தினை யையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவனார் கோத்தார் என்று கூறுக;" என்றும், நூலின் இறுதியில், "முல்லை, குறிஞ்சி, மருதம் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே என்புழிச் சொல்லாத முறையால் சொல்லவும் படும் என்றலின் இத்தொகையைப் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என இம் முறையே கோத்தார் கல்லக் துவனார்,"என்றும் கூறியுள்ளார். அவரே நெய்தற்கலி 25 ஆம் செய்யுள் உரையில், "சொல்லெச்சமும் குறிப்பெச்ச முமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் கல்லந்துவனார் செய்யுள் செய்தார், என்பதையும் குறித்துள்ளார்.

இக் கூற்றுகளை நோக்க, நல்லந்துவனார் நெய்தற் கலியை மட்டும் பாடினவர் என்பதும், அத்துடன் தம் காலத்தில் இருந்த பிற கலிப்பாக்களைக் கோத்து முறைப் படுத்தியவர் என்பதும் நச்சினார்க்கினியர் கருத்தாதல் தெளி வாகும். ஆயின், நச்சினார்க்கினியர் தமது உரையில் பிற கலி களை இயற்றிய ஆசிரியர் பெயர்களைச் சுட்டவில்லை. இதனால் அவர் காலத்திலேயே பிற கலிகளைப் பாடிய ஆசிரியர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பது தெளி வாகும்.

கலித்தொகையை முதலில் வெளியிட்ட திரு சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள். இந்நூல் இயற்றியோர் ஒருவரே எனக் கருதினர். அதன் பின்,

"பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி மருதனிள நாகன் மருதம்-அருஞ்சோழன் கல்லுருத் திரன்முல்லை கல்லக் துவனெய்தல் கல்விவலார் கண்ட கலி. ’’

என்னும் வேண்பா வெளிப்பட்டது. அது முதல், ஐந்து கலியும் புலவர் ஐவரால் பாடப்பட்டவை எனத் தமிழறிஞர் கருதலாயினர் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச் சித்துறைப் புலவராய் இருந்த திரு. K. M. சிவராசப்பிள்ளை