239
அவர்கள் 'கலித்தொகை ஆசிரியர் ஒருவரே' என முடிவு கட்டினர்.
ஐவர் அல்லர்: காரணங்கள்
(1) கலித்தொகை ஆசிரியர் ஐவரே என்பதற்கு மேற் காட்டிய வெண்பாவைத் தவிர வேறு சான்று இல்லை. எனவே, அவ்வெண்பா நம்பத்தக்கதா என்பதை முதற்கண் ஆராய்தல் வேண்டும்.
1. பாலைக் கலியைப் பாடியவர்-பெருங்கடுங்கோன்
2. குறிஞ்சிக் " " -கபிலர்
3. மருதக். " " -மருதன் இளநாகனார்
4. முல்லைக் " " -சோழன் நல்லுருத்திரன்
5. நெய்தற். " " நல்லந்துவனார்
என்பது அவ்வெண்பாவில் உள்ள செய்தி. ஏனைய தொகை நூல்களில் பாலைத்தினை பற்றிப் பல செய்யுட்களைக் கடுங் கோன் பாடியிருத்தலாலும், குறிஞ்சித்திணை பற்றிப் பல. செய்யுட்களைக் கபிலர் பாடியிருத்தலாலும், முதலிரண்டு. கலிகளை இவர்கள் பாடினார்கள் எனக் கொள்ளினும், ஏனைய மூன்றையும் பிற புலவர் மூவரும் பாடத் தகுதி வாய்ந்தவர் என்பதற்குரிய சான்று ஏனைத் தொகை நூல் களில் காணக் கூடவில்லை. மருதன் இளநாகனார் பிற நூல் களில் பாடியனவாகக் காணப்படும் 39 செய்யுட்களில் பாலை பற்றி 17ம், குறிஞ்சி பற்றி 9-ம், முல்லை பற்றி 5ம், நெய்தல் பற்றி 5ம், மருதம்பற்றி மூன்றுமே உள்ளன. இவர் மருதக்கலியைப் பாடினார் என்பது பொருந்துவதாக உள்ளதா? சோழன் நல்லுருத்திரன் புறநானூற்றில் ஒரு செய்யுளே (190) பாடியதாகத் தெரிகிறது. அவன் பாடிய பா ஒன்றும் வேறு தொகை நூல்களில் இல்லை. அவன்முல்லைக் கலியைப் பாடினான் என அவ்வெண்பா கூறு