பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 249

என்னும் மூவரும் ஒருவரே என்பதை அறிவிக்கும் அடையாளமாக முக்கோலைத் தோளிலே வைத்தவர்; குடையை உடையவர்; காட்டிடத்தே போதல் இயல்பான ஒழுக்கமாகக் கொண்டவர் (9) ; பிரணவத்தை எப்பொழுதும் நினைத்திருப்பவர் (126).

 திருமால், பலராமன், சிவன், முருகன் ஆகிய நால்வரும் சிறப்புடைக் கடவுளராய் மதிக்கப்பட்டனர். உயிர் களைப் படைக்கும் பிரமன் முதல்வன் எனப்பட்டான் (129). திருமாலின் மகனான காமன் (109), அவன் தம்பி சாமன் (26) குறிக்கப்பட்டுள்ளனர், ஆயர் மகள் தெய்வத்திற்குப் பாலை வழங்கக் கோவிலுக்குப் போவாள் (109) குறப் பெண்கள் நேர்த்திக் கடன் செய்வது வழக்கம் (46) . கோவில் ‘கடவுள் கடிநகர்' எனப்பட்டது (84): 'புத்தேளிர் கோட்டம்' என்றும் பெயர் பெற்றது (82). மக்கள் கோவிலை வலம் வருதலும் சிறு பிள்ளைகளை வலம் வரச் செய்வித்தலும் வழக்கம் (82).
 கன்னிப் பெண்கள் தைத்திங்களில் நீராடி நோன்பிருந்து பிறர் மனையின்கண் ஐயமேற்றுப் பாடி அங்குப் பெற்றவற்றைப் பிறர்க்குக் கொடுத்தனர்; அங்ங்னம் கொடுப்ப தால் தமக்கு நற்பயன் உண்டாகும் என்று நம்பினர் (59). இது பிற்காலத்தில் 'மார்கழி நோன்பு' எனப்பட்டது.
 இருடிகள் மாலையில் அழலை ஆவுதி பண்ணி எழுப்புவர் (180). இவர்கள் மனைவியரோடு வாழ்ந்துகொண்டே தவம் செய்பவர். இவர்கள் கடவுளர் எனப்பட்டனர் (98).
 அரிய தவங்களைச் செய்தவர் பேரின்பத்தை அடைவர் என்பது நம்பப்பட்டது (80) நூற் கேள்வியினையுடைய அந்தணர் யாகம் செய்தனர் (86). அவர்கள் மாலையில் தம் சமயக் கடமைகளைத் தவறாது செய்தனர் (119) .
 சில உண்மைகள் : எந்த நாட்டு மனித இனத்திற்கும் பொதுவான பல உண்மைகள் இந்நூலில் இடம் பெற்