பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251


உவமை முதலியன : கலித்தொகைப் பாக்களில் உவமைகள் மிகப் பலவாகும். அவற்றுள் சில இதிகாச புராணக் கதைகளைக் குறிப்பவை [101]; சில அரசியல் செய்திகள் பற்றியவை [70]; வேறு சில உலகியல் பற்றியவை [69] . உரு வக அணி சில செய்யுட்களில் [61, 96, 97, 149] அமைந்துள்ளது. உள்ளுறை உவமம் பல செய்யுட்களில் [39, 123, 132 முதலியன] அமைந்துள்ளது. தற்குறிப்பேற்ற அணியும் இடம் பெற்றுள்ளது [74]. இறைச்சிப் பொருளும் இடம் பெற்றுள்ளது [40]. மேற்கோள்

    கலித்தொகைப் பாக்களில் திருக்குறள், அகநானூறு, சிலப்பதிகாரம் முதலிய சங்க கால நூல்களின் கருத்துகளும் தொடர்களும் சொற்களும் மிகுதியாகப் பயின்று வருகின்றன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காணலாம்.

1. "அளியென உடையேன்யான் அவலங்கொண் டழிவலோ" 20,

"அறனெனும் மடவோயான் அவலங்கொண் டழிவலோ" -சிலம்பு, காதை 18 , வரி 41.

2. "வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்" 27.

"வென்வேலான் குன்றில் விளையாட்டு யானக லேன்" -சிலம்பு, காதை 29, செ. 10,

3. "பாடல்சால் சிறப்பிற் சினையவும் சுனையவும்" 28

"பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கமும்" சிலம்பு, காதை 5, வரி 58.

4. "காதலர்ப் புணர்ந்தவர் கவவுக்கை நெகிழாது" -33.

"காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்" - சிலம்பு, காதை 1, வரி 61.