பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார் 273


4. "கள்ளின் களியெழக் காத்தாங் கலரஞ்சி"

 10, வரி 65


“களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ யற்று”-குறள் 929

புராணக் கதைகள்
1. பாற்கடலைக் கடைந்தது-2, வரி 71-72; 3 வரி 33–34
2. கருடன் தன் தாயின் துயரைக் களைந்தது-3, வரி15–18.
3. கண்ணன் கேசி என்னும் அசுரனைக் கொன்றது-3,31-32.
4. பிருங்கலாதன் கதை-4, வரி 12-21,
5. முருகன் சூரனைக் கொன்றது-5 வரி 4.
6. முருகன் கிரெளஞ்ச மலையைப் பிளந்தது-5, வரி 9,
7. முருகன் பிறப்பு-5, வரி 27-49.
8. சிவன் முப்புரம் எரித்த கதை-5, வரி 25.
9. முருகன் போர்க்கருவிகள் பெற்ற கதை-5, வ 50–70.
10. அகலிகை கதை-19, வரி 50-52.

இவற்றுள் பாற்கடலைக் கடைந்தது, கருடன் தன் தாயின் துயரைக் களைந்தது. பிருங்கலாதன் வரலாறு, முருகன் பிறப்பு, முருகன் போர்க் கருவிகள் பெற்ற வரலாறு, அகலிகை சாபம் பெற்றது ஆகியவை பிற தொகை நூல்களில் இடம் பெறாதவை என்னலாம். வட நாட்டுக் கதைகள் தமிழகத்தில் காலப்போக்கில் மிகுதியாக இடம் பெற்றமையை இவை உணர்த்துகின்றன.


த-18