பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.இராசமாணிக்கனார்

283


காலாட் படையினர் தங்கி இருப்பர். அரசனது வெற்றியைக் கருதிப் புலவரும் பாணரும் கூத்தரும் பொருநரும் பாசறையில் இருப்பர். விறலியரும் பாணரும் அரசனது போர் வீரத்தைப் புகழ்ந்து பாடுவர்; அவன் ஒவ்வொரு போர்த்துறையிலும் வெற்றி பெற்றவுடன் அவ்வெற்றியைப் புகழ்ந்து பாடுவர் (54).

மன்னன் பகைவர் நாடுகளை அழித்து அங்குக் கிடைக்கும் பொருள்களைப் பரிசிலர்க்கு வழங்குவான் (33): வெற்றி பெற்ற தன் வீரர்க்குப் பொற்கட்டிகளையும் பிற வற்றையும் வழங்குவான் (81, 83).

தோற்ற அரசனது காவல் மரத்தைக் கொண்டு, வென்ற அரசன் முரசு செய்துகொள்ளுவான் (11) . வீரர் அம்முரசுக்குப் பலியிடுவர் (17, 19) . பகைவரது பட்டத்து யானையின் தந்தங்களை அறுத்துச் செய்யப்பட்ட பலிக்கட்டில்மீது வீரர் தம் குருதியைத் தெளிப்பர் (79).

போரில் ஊது கொம்புகளும் வலம்புரிச் சங்குகளும் முழங்கும் (67) , முரசின் ஓசையும் தண்ணுமை ஒசையும் கேட்கும் (84); பாசறையில் பலவகை இசைக் கருவிகளுடன் கலந்து முரசு முழங்கும் (88). வெற்றிக்குப் பிறகு வீரர்க்கு உணவு விருந்தும் இசை விருந்தும் நடைபெறும் (30) . தோற்ற படை வீரருட் சிலர் வென்ற வேந்தன் படையில் சேருவதும் உண்டு (63). படையெடுக்கும் அரசர் தமக்குப் போரில் வெற்றி கிடைக்குமா என்பதைக் கழங்கிட்டுப் பார்த்தல் வழக்கம் (82), அறிவுள்ள அரசன் தன் அரச நிலையைக் குறித்துப் போரிடுவானே தவிர மண்ணாசையால் போரிடான். நிலையாமை உணர்வே அவன் புரியும் போரில் சிறந்திருக்கும் (84) . -

சமயச் செய்திகள் : முனிவர்கள் பிற உயிர்களுக்குத் தீங்கு நினையாதவர்; வாய்மை தவறாதவர்; பிறர் மதிக்கத் தக்க பெருமையினை உடையவர். அரசர்கள் அவர்களைக் கொண்டு வேள்விகளைச் செய்தனர். அம்முனிவர்