பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மு. இராசமாணிக்கனார்

305


கண்ணனார் என்ற புலவரும் கரிகாற் சோழன்மீது பட்டினப்பாலை பாடினார். (4) இப்புலவரே தொண்டைமான் இளந்திரையன் மீது பெரும்பாண் ஆற்றுப்படையைப் பாடினார். எனவே, கரிகாற் சோழனும் தொண்டைமான் இளந்திரையனும் ஒரு காலத்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறதன்றோ? கரிகாற்சோழன் காலம் ஏறத்தாழக் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம் (கி.பி. 75-115) என்பது முன்பே குறிக்கப்பட்டது. மாங்குடிமருதனார்என்ற புலவர் தலையாலங்கானத்துச் செருவென்றநெடுஞ்செழியன்மீது மதுரைக் காஞ்சியைப் பாடியுள்ளார். நக்கீரர் என்ற புலவரும் அதே அரசன்மீது நெடுநல்வாடையைப் பாடியுள்ளார். நக்கீரர் அகநானூறு 141 ஆம் செய்யுளில்,

செல்குடி கிறுத்த பெரும்பெயர் கரிகால் வெல்போர்ச் சோழன்'

என்று குறித்துள்ளார். இவர் கரிகாலன் காலத்தவர் என்பதற்குச் சான்றில்லை. எனவே, இவர் கரிகாலனுக்குப் பிற்பட்டவர் என்பதே பொருந்தும். ஆகவே, நக்கீரரால் பாடப்பட்ட நெடுஞ்செழியனும் கரிகாலற்குப் பிற்பட்டவன் என்று கொள்வதே பொருத்தமாகும். கரிகாலனைப் பாடிய புலவருள் ஒருவரேனும் இந்நெடுஞ்செழியனைப் பாடாமையும் இவ்வுண்மையை உறுதிப்படுத்துகிறது என்னலாம்.4

பெருங்கெளசிகனார்என்ற புலவர் நன்னன் சேய் நன்னனைப் பற்றி மலைபடுகடாம் பாடியுள்ளார். இந் நன்னன் சிறந்த கொடைவள்ளல் என்று மலைபடுகடாம்


1. S. Vaiyapuri Pillai, History of Tamil Language& Literature, pp. 33–34 .

த-20