பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

307


பாடப்பட்ட காலத்தில்-கபிலர் இல்லை என்பது வெளிப்படை.

 ஆகவே, பொருநர் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப் படை, பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு ஆகிய நான்கும் ஏறத்தாழ ஒரு காலத்தன என்று கூறலாம். மலை படுகடாம், மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை என்ற மூன்றும் ஒரு காலத்தன என்று கூறலாம்.
 சிறுபாண் ஆற்றுப்படையில் பாரி முதலிய ஏழு வள்ளல்களின் வரலாறு இறந்த காலச் செய்தியாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வள்ளல்கள் கபிலர், பரணர், முடமோசியார், ஒளவையார் முதலிய புலவர்களால் பாடப்பட்டவர்கள். எனவே, இப்புலவர்களுக்கும் பிற்பட்ட காலத்தில் நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் சிறுபாண் ஆற்றுப் படையைப் பாடினார் என்று கொள்வது பொருத்தமாகும். இவ்வாற்றுப் படை ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்ற சிற்றரசனைப்

பற்றியது.

  முல்லைப்பாட்டில் யவனரைப் பற்றியும் மிலேச்சரைப் பற்றியும் குறிப்புகள் வருகின்றன (வரி 60-66), நெடுநல் வாடையிலும் இவ்விருவரைப் பற்றியும் குறிப்புகள் வருகின்றன (31-35, 101) . ஆதலால் இவ்வகைக் குறிப்புகள் காணும் நூல்கள் காலமுறையில் அடுத்தடுத்துத் தோன்றின என்று கொள்ளுதல் பொருத்தமே. எனவே, நெடுநல் வாடையை அடுத்து முல்லைப்பாட்டுத் தோன்றியிருத்தல் கூடும்.4
   பதிற்றுப்பத்தில் பத்தாம் பத்து யானைக்கட்சேய் மாந்த ரஞ்சேரல் இரும்பொறை பற்றியதாக இருத்தல் கூடும் என்று அறிஞர் கருதுகின்றனர்.5 அவன் ஐங்குறுநூற்

 4. எஸ். வையாபுரிப்பிள்ளை, இலக்கிய தீபம், பக்.8-9 
 5. S. V. Piİlai, History of Tamil Language&litera. ture, p. 37.