பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

315

பத்துப்பாட்டுச் செய்திகள்

1.திருமுருகாற்றுப்படை : இதன்கண் முருகன் கோயில் கொண்டுள்ள திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் , திரு ஆவினன்குடி, திரு ஏரகம் ஆகிய தனித்தனி இடங்கள் நான்கு குறிக்கப்பட்டுள்ளன; பின்பு பழம் உதிர்கின்ற. சோலைகளையுடைய மலைகளை விரும்பியுறையும் முருகன் எல்லாக் குன்றுகளிலும் சதுக்கங்களிலும் நீர்த்துறைகளிலும் பிற இடங்களிலும் வாழ்கின்றான் (முருகன் எங்கும் உறைபவன்) என்பது குறிக்கப்பட்டுள்ளது. 317 அடிகளைக் கொண்ட இந்நெடும்பாட்டு ஆறு பிரிவுகளை உடையது. முதற் பிரிவில்-முருகனது திருவுருவச் சிறப்பு, அப்பெருமான் அணியும் மாலைகள், சூரர மகளிர் செயல்கள், சூரபதுமன் அழிவு, கூடலின் சிறப்பு, திருப்பரங்குன்றத்தின் இயற்கை வளம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில்-முருகனது யானையின் இயல்பு, அப் பெருமானுடைய ஆறு திருமுகங்களின் செயல்கள், பன்னிரண்டு திருக்கைகளின் செயல்கள், அவன் திருச்சீரலை வாயில் எழுந்தருளியிருத்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பிரிவில்-முருகனை வழிபடும் முனிவர் ஒழுக்கம், அவனை வழிபடவரும் தேவர்-மகளிர் இயல்புகள், திருமால் முதலிய தேவர்கள் பற்றிய செய்திகள், திருவாவினன் குடியில் முருகன் கோவில் கொண்டிருத்தல் ஆகியவை கூறப்பட்டுள்ளன. நான்காம் பகுதியில்-மந்திரம் ஒதுவார் இயல்பும் அருச்சகர் நிலையும் முருகன் திருஏரகத்தில் இருத்தலும் கூறப்பட்டுள்ளன. ஐந்தாம் பிரிவில்-குன்றக்குரவையின் நிகழ்ச்சி, ஆடு மகளிர்-பாடு மகளிர் இயல்பு, முருகனுடைய அணி, ஆடை செயல் முதலியன, அப்பெருமான் குன்றுதோறும் உவந்து ஆடுதல் என்பவை இடம் பெற்றுள்ளன. ஆறாம். பகுதியில்-முருகன் எழுந்தருளியுள்ள நீர்த்துறை முதலிய. பல இடங்கள், தேவசாட்டி முருகனை ஆற்றுப்படுத்தும்