பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


7. சங்க காலத்தில் வேங்கடம் மாமூலனாரால் “விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம் 61) என்று கூறப்பட்டுள்ளது. எனவே, வேங்கடமலையில் விழாக்கள் நடை பெற்றுவந்தன என்பது இதனால் தெரிகின்றதன்றோ! மலை மீது விழாக்கள் நடைபெற்றன என்பது கொண்டு, அங்குக் கோவில் இருந்தது என்பதை எளிதில் அறியலாமன்றோ! உண்மை இங்ங்னம் இருப்ப, சங்ககால வேங்கடம் சமயச் சிறப்புப் பெற்றிருக்கவில்லை என்று பிள்ளையவர்கள் கூறியிருப்பது உண்மைக்கு மாறுபட்டதாகும் மாமூலனார் அகப் பொருள் பற்றிய பாடலில் ஒர் எடுத்துக்காட்டுக்காக இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆதலால் வேங்கடத்தில் எத தகைய கோவில் இருந்தது என்று அவர் கூறவில்லை. அதனால் வேங்கடத்தில் கோவில் இல்லை என்று முடிவு கட்டுதல் தவறு. கோவிலைப்பற்றிப் பேசவேண்டிய இடம் அதுவன்று; ஆதலின் அவர் பேசவில்லை. கோவிலைப் பற்றிக் கூறவேண்டிய இடத்தில் மாங்காட்டு மறையவன், தன் கண்ணாற் கண்டு வழிப்பட்ட வேங்கடத்தானது நின்ற கோலத்தைத் தான் கண்டவாறு கூறியதாக அடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பித்து மகிழ்ந்தனர் என்று கோடலே ஏற்புடையது.

காவிரிப்பூம்பட்டினத்தில் சிறப்பாக இந்திரவிழா நடை பெற்றதைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விரிவாகக் கூறியுள்ளன. இதே இந்திரவிழவு சிற்றுளிலும் அக்காலத்தில் நடைபெற்றுள்ளது என்பதை ஐங்குறுநூற்றுச் செய்யுள் ஒன்று (62) குறித்துள்ளது. ஆயின் அதுபற்றிய பிற விவரங்கள் அச்செய்யுளில் இல்லை. ஏன்? அப்பாடல், குறிப் பிட்ட ஓர் அகப்பொருள் கருத்தைக் கூறவந்ததே தவிர இந்திர விழாவினை விளக்கப் பாடப்பட்டதன்று. இவ்வாறே ஒவ்வொரு தொகை நூற்பாடலும் குறிப்பிடப்பட்ட அகப் பொருள் அல்லது புறப்பொருள் கருத்துக்காகப் பாடப்பட்டது. சிலப்பதிகாரம் கோவலன்-கண்ணகி வரலாறு கூறும் பெரிய காப்பியம். ஆதலின் தலைவன்-தலைவியர்