பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

343


காலச் சமயச் செய்திகளையும் பிறவற்றையும் விரிவாக எடுத்துக் கூற ஆசிரியருக்கு வாய்ப்பு மிகுதியாகக் கிடைத்துள்ளது. மணிமேகலை பெளத்த சமயத்தைப் பற்றிய காவியம் ஆதலின் அதன்கண் பெளத்த சமயச் செய்திகள் நிரம்பப் பேசப்பட்டுள்ளன. காவியப் பாத்திரங்கட்கேற்பநிகழ்ச்சிகட்கும் ஏற்பச் சமயச் செய்திகளோ பிறவோ காவியத்தில் விரித்துப் பேசப்படல் இயல்பு. இந்த வேறுபாட்டை உள்ளங்கொள்ளுதல் வேண்டும். இதனாற்றான் தொகைநூற் பாடல்களில் சமயச் செய்திகள் விரிவாகப் பேசப்படவில்லை; காப்பியத்தில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

8. சிலப்பதிகாரத்தில் காவிரி-காவேரி என்று சொல்லப்பட்டது. இதனாலும் சிலப்பதிகாரகாலம் பிற்பட்டது என்பது தெளிவு, என்று பிள்ளையவர்கள் கூறியுள்ளனர். சிலப்பதிகாரம் கானல்வரியில், பாட்டைப் பாடுவோர் "காவேரி என்று காவிரியை அழைத்ததாக இளங்கோவடிகள் குறித்துள்ளாரே தவிர, பிற எல்லா இடங்களிலும் ‘காவிரி’ என்றே குறித்துள்ளமை நோக்கற்பாலது. சிலப்பதிகாரம் நாடகக்காப்பியம். ஆதலின் அவரவர் கையாளுகிற சொற்களை அவரவர் பேச்சில் அல்லது பாடலில் வைத்து வழங்குதல் உண்மைப் புலவர் இயல்பாகும். இளங்கோவடிகள் இம்முறையையே பின்பற்றியுள்ளார். கோவலன் யாழை வாங்கிக் ‘காவிரி’ என்று அழைத்துப் பாடத் தொடங்குகிறான் என்பதைக் கூறும் இடத்திலும் இளங்கோ வடிகள்,

“காவிரியை நோக்கினவுங் கடற்கானல் வசிப்பாணியும்
மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன்”

என்று கூறியிருத்தல் கவனிக்கத்தகும்.

முருகன் கனவிற் கூறியபடி அரசன் ஓர் ஊரின் கிணற்றிலிருந்து வேலை எடுத்துத் தன் பகைவனை வென்றான். வேல் எடுக்கப்பட்ட கிணற்றைக்கொண்ட ஊர் “வேலூர்”