பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഉിഥി வளர்ச்சியில்-பாரதியின்-உரைநடை-அ-சீனிவாசன் ዝ07 19. பாரதி தன்னுடைய கவிதைகளுக்கு எழுதியுள்ள சில முன்னுரைகள் பாரதி தான் எழுதியுள்ள கவிதைகளுக்கும், கவிதைத் தொகுப்பு வெளியீடுகளுக்கும் முன்னுரைகள் எழுதியுள்ளார். அவை அவருடைய உரைநடைக்கும் எடுத்துக் காட்டாக உள்ளன. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம். பொய்யோ மெய்யோ என்னும் தலைப்பில் பாரதி எழுதியுள்ள பாடலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரை அல்லது விளக்கவுரை அல்லது காரண உரையை இங்கு காண்க. “எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மைதான். ஆனால் எல்லாருக்கும் எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது. சின்ன திருஷ்டாந்தம் சொல்லுகிறேன். “ஒரு செல்வர், கிழவனார் ஒரு வேளை ஆகாரம் செய்து கொண்டு லெளகீக விஷயங்களைத் தான் கவனியாமல் பிள்ளைகள் கையிலே கொடுத்து விட்டு, நியம நிஷ்டைகள், ஜப தபங்களுடன் சுந்தர காண்டத்தையும், கடோ பநிஷதையும் பாராயணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதே மேலான வழியென்ற கொள்கை இந்தக் கிழவனாருக்கு சரிப் பட்டு வரும். “ஒரு 16 வயது ஏழைப்பிள்ளை தகப்பனில்லை. வீட்டிலே தாயாருக்கும் தங்கைக்கும் தனக்குமாக எங்கேனும் போய் நாலு பணம் கொண்டு வந்தால்தான் அன்றன்று அடுப்பு மூட்டலாம். இவன் மேற்படி சுந்தரகாண்ட வழியைப் போய் பிடித்தால் நியாயமாகுமா? . =