பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பாரதி தன்னுடைய கவிதைகளுக்கு எழுதியுள்ள சில முன்னுரைகள் TԶԱ) “நம்மவர் காத்திருக்கும் பழய வழக்கை மாத்திரம் மறந்து விட்டாய். கூடித்திரியர்களுக்குள்ளேயிருக்கும் புராதன சம்பிரதாய மொன்றை மாத்திரம் நீ மறந்து விட்டாய் என்று சகுனி சொல்கிறான். வழக்கு வழக்கம், பூர்வாசாரம், மாமூல் அந்த பூர்வாசாரம் இன்னதென்பது பின்னே எட்டாம் வரியில் கூறப் படுகிறது. “மன்னர் வல்லினுக்கழைத்திடில் மறுப்பதுண்டோ?” என ஒரு அரசனை மற்றொருவன் “என்னுடன் சூதாட வா” என வலிந்தழைக்கும் போது மாட்டேன்' என்று சொல்லலாகாது என்பது கருத்து. கூடித்திரியன் நஷ்டங்களுக்குத் துணிந்திருக்க வேண்டுமென்று நல்ல கொள்கையால் விளைந்த கெட்ட வழக்கங்களில் இதுவொன்று. அறிவுடையவர்கள் கூடப் பூர்வாச்சாரம் என்ற காரணத்தால் தீய வழக்கங்களை அனுசரித்தல் பாரத தேசத்திற்கு ஏற்பட்ட சாபம், இப்போது தான் நீங்கி வருகிறது” என்று பாரதி குறிப்பிட்டு மேலும் தொடர்ந்து எழுதுகிறார். பாட்டு 178 - 181 வரையிலான பாட்டு வரிகளிலே இப்பூர்வாசாரங்களில், ஆராய்ச்சியிலில்லாது, பக்தி செலுத்து -வோரின் மடமை காட்டப்படுகிறது. பழமையிலே பெரும்பகுதி உயர்வு சான்றது தான் பாரத தேசத்தினராகிய நம்மவரின் நடைகள் அறிவும் அறனும் பொதிந்தனவாகும். ஆயினும் இழிந்த அமானுஷிக நடைகள் சில இவற்றோடு கலந்துள்ளன. “எனது தந்தை கூடிய ரோகம் வந்து இறந்து போனார் எனக்கும் கூடிய நோய் வந்திருக்கிறது. எங்கள் பாட்டனுக்கும் இந்த நோய் உண்டு. ஆதலால் இந்த நோய் தீர்ப்பதற்கு நான் மருந்து தின்ன மாட்டேன்”என்று ஒரு மனிதன் சொல்லுவானானால் அவன் எவ்வளவு பெரிய மூடன்? லோக கூேடிமத்திற்கும் லோகாபிவிருத்திக்கும், இந்த மாமூல் பக்தி எத்தனை பெரிய இடையூறு என்பதை நம்மவர் இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை” என்று பாரதி தனது உரைநடையில் கூறுகிறார்.