பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியரைப் பற்றி 145 திரு. அ. சீனிவாசன் 1947-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை சுமார் 52 ஆண்டுகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில், அக்கட்சியின் வட்டாரப் பொறுப்பிலிருந்து, மாவட்ட, மாநில, அகில இந்தியப் பொறுப்புகள் வரையில் பல்வேறு பொறுப்புகளில் குறிப்பாக அமைப்பு நிலை, தொழிற் சங்கத்தலைமை, பத்திரிகைத்துறை, பிரச்சாரத்துறை, பிரசுரத்துறை, கட்சிக்கல்விப் பயிற்சித்துறை, (சித்தாந்தத்துறை) முதலிய பல துறைகளிலும் பணியாற்றியுள்ளார். கட்சியின் உயர்ந்த அமைப்பான தேசியக் கவுன்ஸிலில் இருபத்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்து, மாநில, மத்தியப் பொறுப்புகள் பலவற்றில் இருந்து பணியாற்றியுள்ளார். தமிழ் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாநில அளவில் அமைப்பு நிலை, சித்தாந்தப் பயிற்சி, பத்திரிகை பொறுப்புகள் வகித்து இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கட்சியின் உயர் மட்டக் குழுவின் பிரதிநிதியாக அன்றைய சோவியத்யூனியன் (ரஷ்யா-மாஸ்கோ, லெனின் கிராட், ஆர்மீனியா, ஆஜர்பைஜான்) மற்றும் செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து சுற்றுப் பயணம் செய்துள்ளார். தொழிற் சங்கத் தலைவராக திரு.அ.சீனிவாசன் 1950-ம் ஆண்டு காலத் தொடக்கத்திலேயே இராஜபாளையம், சிவகாசி, சத்திரப்பட்டி, தளவாய்புரம், விருதுநகர், சாத்துார், அருப்புக்கோட்டை, யூரீவில்லிபுத்துர் ஆகிய பகுதிகளில் பஞ்சாலை, அச்சு, தீப்பெட்டி, கைத்தறி மற்றும் பல தொழில்கள் தொடர்பான தொழிலாளர் சங்கங்கள் பல்வற்றையும் தொடங்கியும், உருவாக்கியும், தொழிற் சங்கத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். மாநில அளவிலும் பல தொழிற் சங்கப் பொறுப்புகளில் இருந்து பணியாற்றியுள்ளார்.